இந்த உலகத்திற்கு கடவுள்
என்னை நம்பி............
கையோடு "வா"
என்று சொன்னார்கள் வந்தேன்
கையோடு "பார்"
என்று சொன்னார்கள் பார்த்தேன்
கையோடு "கேள்" என்று
சொன்னார்கள் கேட்டேன்
கையோடு "படி" என்று
சொன்னார்கள் படித்தேன்
கையோடு "பேசு" என்று
சொன்னார்கள் பேசினேன்
கையோடு "எழுது" என்று
சொன்னார்கள் எழுதினேன்
கையோடு "முயல்"
என்று சொன்னார்கள் முயன்றேன்
கையோடு "வாழ்"
என்று சொன்னார்கள் வாழ்கிறேன்
இந்த "கை"க்கு
எல்லாம் கை கொடுத்தது
நம்பிக்கை
அதை தூண்டியது .....................
தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையே வெற்றிக்கு
வழி!!
No comments:
Post a Comment