எண்ணங்களுக்கு வண்ணமேற்ற
சிந்தையிலே குழப்பியெடுத்து
வலைப்பூ நாடி முகிலம்
தேடி
தோண்டி பண்ணெடுத்து
தொடுத்த நல்கவிதை இது
நல்லறிவுக்கு நாலாயிரம்
பழமொழியோடு
நீதிநெறி விளக்கம்
தெளிந்து
சமையலின் மேல் மையல்
கொண்டு
தமிழக விளையாட்டுகளில்
திளைத்து
சித்த மருத்துவ குறிப்பேடுகள்
புரட்டி
தேர்ந்தெடுத்த பல குறிப்புகளோடு
தமிழிசை தெம்மாங்கென்றும்
நாட்டுப் புறப்பாடலென்றும்
கிராமியப் பாடலென்றும்
வலை முழுக்க தேடினேன்
விதம் விதமாய் சொற்றொடரமைத்து
தேடி அலைந்தேன் கிராமியப்
பாடல் கேட்க
இத்தனை தேடியும் என்
சிந்தைக் கவர்ந்த
அத்தனை பாடலும் அமையவில்லை
புத்தகங்கள் தேடி வலை
நாடி அமையாத
அப்பாடல் கேட்டேன்...........
கழனி வயலில் கண்ணம்மா
பாடுகிறாள்
காற்றோட்ட திண்ணையிலே
குப்பன் பாடுகிறான்
பள்ளி சிறார்கள் பாடியபடி
ஓடுகிறார்கள்
வலைகள் பல பிண்ணினாலும்
வாடாத வசந்தம்
இன்னும் வாழ்கிறது
இயல்பாய்
பாமரனின் பாடலிலே!!
No comments:
Post a Comment