Sunday, January 11, 2015

பாமரப்பாட்டு



எண்ணங்களுக்கு வண்ணமேற்ற
சிந்தையிலே குழப்பியெடுத்து
வலைப்பூ நாடி முகிலம் தேடி
தோண்டி பண்ணெடுத்து
தொடுத்த நல்கவிதை இது

நல்லறிவுக்கு நாலாயிரம் பழமொழியோடு
நீதிநெறி விளக்கம் தெளிந்து
சமையலின் மேல் மையல் கொண்டு
தமிழக விளையாட்டுகளில் திளைத்து
சித்த மருத்துவ குறிப்பேடுகள் புரட்டி
தேர்ந்தெடுத்த பல குறிப்புகளோடு

தமிழிசை தெம்மாங்கென்றும்
நாட்டுப் புறப்பாடலென்றும்
கிராமியப் பாடலென்றும்
வலை முழுக்க தேடினேன்
விதம் விதமாய் சொற்றொடரமைத்து
தேடி அலைந்தேன் கிராமியப் பாடல் கேட்க

இத்தனை தேடியும் என் சிந்தைக் கவர்ந்த
அத்தனை பாடலும் அமையவில்லை
புத்தகங்கள் தேடி வலை நாடி அமையாத
அப்பாடல் கேட்டேன்...........

கழனி வயலில் கண்ணம்மா பாடுகிறாள்
காற்றோட்ட திண்ணையிலே குப்பன் பாடுகிறான்
பள்ளி சிறார்கள் பாடியபடி ஓடுகிறார்கள்
வலைகள் பல பிண்ணினாலும் வாடாத வசந்தம்
இன்னும் வாழ்கிறது இயல்பாய்
பாமரனின் பாடலிலே!!


No comments: