Sunday, January 11, 2015

வாழ்க்கை



வாழ்க்கையா வாழ்ந்தீர்கள் நீங்கள்?
ஒழுக்கத்தை வகைபடுத்தி வாழ்ந்தீர்கள்
நெறியை வார்த்தெடுக்க வாழ்ந்தீர்கள்
புவியை நேர்படுத்த வாழ்ந்தீர்கள்
மேலாண்மை ஓங்கிட வாழ்ந்தீர்கள்
நீதி உயர்ந்திட வாழ்ந்தீர்கள்
எல்லாம் நிறைந்திட வாழ்ந்தீர்கள்
வாழ்ந்து போதீரே!!

வசவுகள் கூட வாழ்த்தாயின
கசப்புகள் எல்லாம் கரைந்தோடின
யாதும் ஊரே யாவரும் கேளீர்
திண்ணை இருப்பது திண்ணன் அமரவே
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அடைக்கலமே
வாழ்ந்து போதீரே!!

தாலாட்டிலே வாழ்த்துப்பாடி
முலைப்பால் தொட்டே தைரியமூட்டி
தவழ்ந்திடும் போதே நடைதிருத்தி
வாய் திறந்து பேச மகிழ்ந்து கொண்டாடி
வாழ்க்கையை திடமுடன் வாழ ஊக்கமளித்து
தோழமையொடு வளர்த்தீரே
வாழ்ந்து போதீரே!!

எம் பிள்ளை இது போல
மலர்ந்திடுமா? வளர்ந்திடுமா?
மறந்திலேன் துறந்திலேன் தங்களை
எம் குலம் தழைக்கவாவது

வாழ்ந்து போதீரே!

No comments: