Saturday, October 21, 2017



M –MEDICINE
05/01/2016: பழமொழி – காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய். சூரிய கதிரானது காலை வேளையில் குளுமையாகவும் பித்தத்தை ஏற்படுத்தும் அதனால் இஞ்சியும், மதியம் வெப்பம் அதிகமாகும்போது வாதத்தை ஏற்படுத்துவதால் சுக்கையும் மாலை வேளையில் சூரிய கதிர்கள் சூடிலிருந்து தணிக்கப்பட்ட குளுமையாக மாறுவதால் சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு இரவில் கடுக்காயும் உட்கொண்டு வந்தால் எல்லா விதமான நோயிலிருந்தும் விடுபடலாம் என்பது முன்னோர் வாக்கு. முக்கியமாக இது எடை குறைக்கும் மருந்தாகும். இவை பொடிகளாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

12/01/2016: கடுக்காயின் விதையை நீக்கி இடித்து பொடித்து கொண்டு அதே அளவு பனைவெல்லம் பொடியை சேர்த்து கலந்து கொண்டு ஒரு டீஸ்பூன் பொடியை வெந்நீரில் தினமும் 2 முறை குடித்து வந்தால் எடை தானாக குறையும். 2 மாதங்கள் வரை விடாமல் தொடர முழுமையான பலன் கிடைக்கும். ஆரோக்கியமான வாழ்வே நலமான வாழ்வு!!

17/01/2016: கணபதி மருத்துவம்: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. இந்தப் பாடலில் நாம் எளிமையாக பயன்படுத்தக் கூடிய சுலபமாய் கிடைக்க கூடிய அருமையான காயகற்பம் ஒளிந்துள்ளது. இந்தப் பாடலை நாம் பின்னிருந்து முன்னாக பொருள் கொள்ள வேண்டும். துப்பு – தேன், திரு – துளசி, மேனி – குப்பைமேனி, தும்பி – தும்பை, கையான் – கரிசலாங்கண்ணி, பாதம் – வேர் (சமூலம் – வேரோடு கூடிய முழு செடி). இவை முறையே 250மில்லி சாறு எடுத்துக் கொண்டு அதனோடு 1கிலோ கருப்பட்டி சேர்த்து பாகு காய்ச்சி மற்ற சாறுகளுடன் சேர்த்து கலக்கி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 10மில்லி விடிகாலையில் வெறும் வயிற்றில் இதை அருந்தி வந்தால் நோய் நம்மை அணுகாது. பாடலின் முதல் வரியில் சொல்லிய பலன்கள் கிடைக்கும். அதாவது நல்ல குரல் வளம், நிலையான தெளிவான மனது, கண் பார்வை கோளாறுகள் நீங்கும், மேனி மினுமினுக்கும். ஔவையாரின் கவித்திறமும் சித்த மருத்துவ அறிவும் நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைத்த அரிய பொக்கிஷம். வாழ்க தமிழ்!! வளர்க சித்த மருத்துவம்!!!

28/01/2016: 10 மில்லி இஞ்சி சாற்றுடன் 1 இளநீரைக் குடித்தால் இருமல் சளி தீரும், சிறிதளவு சீரகம் எடுத்து நன்றாக வறுத்துப் பொடித்துக் கொண்டு 5 மில்லி தேன் சேர்த்து உள்ளங்கையில் வைத்து நக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும், இனிப்பான பப்பாளி பழத்தை உணவு அருந்திய பின் சாப்பிட்டு வந்தாலும், தக்காளி பழத்துடன் சிறிது உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் மலசிக்கல் செரியாமை போன்ற பிரச்னைகள் தீரும்

27/03/2016: இயற்கை அன்னை தன் மடியில் பலவிதமான் மருத்துவ மூலிகைகளை வைத்திருக்கிறாள். அவற்றை பற்றி நாம் சிறிதளவு தெரிந்து கொள்வோமா? கல்ப மூலிகை-refuvemating, ஞானம்-Spiritual, ரசவாதம் –Alchemical, வசியம்-Psychic, மாந்த்ரீகம்-black magic,வழிபாடு-religious,பிணி தீர்ப்பது-therapeutic,உடல் தேற்றி-tonic,உலோகம்-metallogenic,வர்ம மூலிகை-chiropractic,விஷ முறிவு மூலிகை-antidotes,எலும்பு ஒட்டுவது-bone fix,தசை ஒட்டுவது-muscle toners,பச்சை குத்துவது-tattoo,காதணி ஓம்புவது-ear boring,பல் பிடுங்குவது-dental xtraction… ஆச்சரியமூட்டும் மூலிகைகள் ஏராளம் தாராளம்!!

09/04/2016: Precaution is better than cure… Veyil coluthing so you can prevent yourself by kutti things. To avoid over thirsty take paanagam, neermore, velliri, melon fruits. To overcome dry cough tiny pieces of chithraththai, panai vellam, panagalkandu, warm water, turmeric&pepper milk in night. Take more curd rice. Avoid more spices and masala. Try to keep In and out of body cool. Avoid spending more time near air cool machines. Koba padum kuzhandhai summer! Love and enjoy nature!!



G- GENERAL



07/01/2016: கோபுர கலசம் நவதானியங்களாலும், சாமை, வரகு போன்ற சிறுதானியங்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணம் பல இருக்கின்றன. உலக இயக்க சக்தியை கிரஹித்து ப்ரதிஷ்டை செய்துள்ள மூர்த்தங்களுக்கு சக்தி ஏற்றுதல், ஓஸோன் படலத்திலிருந்து ஒஸோன் காற்றை உள்வாங்குதல், தவிரவும் முக்கிய காரணமாக கருதப்படுவது…. பிரளய காலம் முடிந்த பிறகு மக்கள் பசி தீர்க்கவும் மறு விவசாய வளர்ச்சிக்கு வித்திடவும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வகை தானியங்கள் 1000 வருடங்களுக்கு பிறகும் தனது வீரியத்தை விடாமல் எந்த வகையான மண்ணிலும் பயிராக கூடியது. சிவபுராணக் கூற்றுப்படி “….செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்….” உலகின் எத்தகைய நிகழ்விலும் தாவரங்கள் மட்டுமே உயிர்க்கும், மற்றவை சென்றுவிடும் என்பது திண்ணம். ஆதலால் தங்கள் வாழ்நாளில் விவசாயத்திற்கு, இயற்கை வளத்திற்கு வித்திடும் செயலை செய்யுங்கள்/உதவுங்கள் அது உங்களுக்கு(சந்ததிக்கு) பல மடங்கு திரும்ப கிடைத்துவிடும். முன்னோரை பின்பற்றுவோம்!! இயற்கையோடு வாழ்வோம்!!

10/01/2016: தமிழ்நாட்டு வீர விளையாட்டுக்கள்: சிலம்பம், காளையடக்குதல், மல்யுத்தம், கபடி, உரியடித்தல், படையெடுத்தல், வேல் எரிதல், ஈட்டி எரிதல், குண்டெரிதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம், வில் அம்பு எய்தல், கவன் அடித்தல், இளவட்டகல் தூக்கல்… நம்ம இதல்லாம் தெரிஞ்சாவது வச்சுப்போம். அடுத்தவங்க (வெளிநாட்டுக்காரர்கள்) உரிமை கொண்டாடமல் பாதுகாக்கறதுக்காக!!!

18/01/2016: இன்றைக்கு மட்டுமாவது: உதவி தேவைப்படும் யாருக்காவது வலிய சென்று உதவுவோம், நாலு பேரையாவது எதற்காகவாவது மனமாற பாராட்டுவோம், இரண்டு பேருக்காவது மணநாள், பிறந்தநாள் போன்ற வாழ்த்துக்கள் சொல்வோம். நல்லதை சொல்லும் புத்தகம் ஒன்றை எடுத்து பத்து பக்கமாவது படிப்போம்.

19/01/2016: இன்றைக்கு மட்டுமாவது: யாரிடமும் எதற்காகவும் கோபத்தை காட்ட மாட்டோம், எந்த இடத்திலும் விவாதத்தை தவிர்ப்போம், யாரை பற்றியும் யாரிடமும் குறை/கோல் சொல்ல மாட்டோம், பிரச்னை பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல் நம்மால் முடிந்ததை செய்து கொண்டே இருப்போம், இன்றைய வேலையை இன்றே முடிப்போம். இவை கேட்டதில் பிடித்த வாக்கியங்கள். சிலவற்றையாவது நடைமுறைப்படுத்தி பார்ப்போமே!!

20/01/2016: “PRAISE” is a good medicine which can be prepared easily and also can be reached amid people. Praising for good cause will also produce a bliss feel inside us. It’s a pathway for healthy relationship. Same way give equal weightage to point negative of them in a friendly manner. Thus balanced personality formed.

22/01/2016: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள். இந்தக் குறளில் எண்ணுக்கு தான் முதல் தகுதி ஏனெனில் எண்கணிதம், எண்ணியல், ஜோதிடம், வானியல், போன்ற அறிவியலும், விஞ்ஞான தொழில்நுட்பங்களும் எண்களையே சார்ந்துள்ளன. இவை அடிப்படையாக வைத்தே காலக் கணக்கீடுகள், மருந்தின் அளவு, ஜோதிட கணிப்புகள், வாழ்நாள் கணக்கீடுகள், முதலிய பல கணக்குகள் கணிக்கப்படுகின்றன. எண்கள் நாம் வாழ்வின் பல பரிணாமங்களிலும், பரிமாணங்களிலும், நிறைந்துள்ளன. உங்கள் நாளை எண்களை வைத்தே தீர்மானியுங்கள் (இவ்வளவு நேரத்திற்குள் இந்த வேலை செய்ய வேண்டும், இத்தனை இட்லி சாப்பிட வேண்டும்,…) வெற்றி உங்களை தேடி வந்து கைக்குலுக்கும்!!

24/01/2016: நீங்கள் பல தரப்பட்ட இசையை கேட்டிருப்பீர்கள். அவை நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. வாத்தியக் கருவிகள் மட்டுமல்ல நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியிலும் நாம் இசையுடன் வாழ்கிறோம். காபி ஆற்றும் சத்தம், குக்கர் விசில், குழந்தைகளின் குறும்புத்தனமான ஆட்டம், குறட்டை, தும்மல், இருமல், காத்தாடியின் ஓசை, வண்டி சத்தம், ஆலய மணி, நமது மூச்சுக் காற்றின் ஒலி, புத்தகத்தை திருப்பும் ஓசை மற்றும் பற்பல. எல்லாவற்றையும் சரிசமமாக உணர்ந்து அனுபவியுங்கள். உங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும்போது “கயிலை வாத்தியம்” – கேளுங்கள். சிவபெருமானுக்கான பிரத்யேக வாத்தியம் கொம்பு, தாளம், மேளத்தோடு கூடிய அருமையான இசை கேட்பதற்கு இனிமையாகவும் துள்ளாட்டம் போட வைப்பதாகவும் இருக்கும். அதற்கான நடன அமைப்பும் உண்டு. தெய்வீக இசை!!!



25/01/2016: பூமி பால்வீதியில் சுற்றும்போது நமது எண்ண அலைகளும் அதனுடன் பயணிக்கின்றன. அதனால் எந்த விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எந்த செயலை செய்தாலும் நல்லதைய நினையுங்கள், செய்யுங்கள், மறந்தும் தீயவைகளை எண்ணாதீர்கள், செய்யாதீர்கள். இதனை வழக்கப்படுத்திக் கொள்வதே நமது பூமித்தாய்க்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும். அவள் மேலும் பாதுகாக்கப்பட்டு நமது சந்ததியினருக்கு நல்ல முறையில் பயன்படுவாள். பசுமை புரட்சி செய்து பூமியை காப்பது ஒருவகை என்றால் இது போன்று நல்ல எண்ணங்களை விதைப்பதின் மூலம் நமது கோளுடனான பிணைப்பை உறுதி செய்பவராகவும், சரித்திரத்தின் குறியீடாகவும் இடம் பெறுவோம்! அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் வாழ்வோம் வாருங்கள்!!!

26/01/2016: Boquet is the collection of multiple flowers. When it is given to a person he/she might be multiple talented. When giving flower; claps are multiple, so multiple recognition. Everywhere multiplication gives us joy. This applicable only which gives personal satisfaction not for worries. Give and get “X(multiples)” to people around you.

29/01/2016: Time & Tide wait for none. We may match this statement to realize Focused action will always be perfect. So try to be focused in whatever you are doing. Time & Tide always do its work round the clock without tired. Cheer up to rock the world with focused mindset. Life is filled with happiness. Choose your energetic straw.

24/02/2016:Today Taml Rhymes: “TTR” சும்மா படிங்க சிரிங்க J MRP FREE ZONE

கொழுக்கட்ட கொழுக்கட்ட ஏன் வேவல?
மழபெஞ்சுது நான் வேவல.
மழையே மழையே ஏன் பேஞ்ச?
புல்லு வளர நான் பேஞ்சேன்.
புல்லே புல்லே ஏன் வளந்த?
மாடு திண்ண நான் வளந்தேன்.
மாடே மாடே ஏன் திண்ண?
மாட்டுக்காரன் அவுத்துஉட்டான் நான் திண்ணேன்.
மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவுத்து விட்டே?
புள்ள அழுவுது நான் அவுத்துவிட்டேன்
புள்ள புள்ள ஏன் அழுவுற?
எறும்பு கடிச்சி நான் அழுவுறன்.
எறும்பே எறும்பே ஏன் கடிச்சே?
என் புத்துக்குள்ள கையஉட்டா சும்மா இருப்பேனா?

26/02/2016: தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய நூல் “சிறகை விரிப்போம்” அவர் குறிப்பிடும் 6 விதமான முட்டாள்கள்: 1. காரணமில்லாத கோபம் – டிவி ரிமோட் வேலை செய்யாவிட்டால் அதை தூக்கி எரிவது. (அதை தூக்கி எரிஞ்சாலும் வேலை செய்யாது தானே!!) 2. தேவையில்லாத (வெட்டி) பேச்சு – எதிரில் இருப்பவர் கேட்கிறாரா என்ற அக்கரை இல்லாமல் பேசுவது. 3. முன்னேற்றமில்லாத மாற்றங்கள் – நாம் இப்போது எப்படி இருக்கிறோமோ அந்த நிலையிலிருந்து மேம்பட்ட நிலையை தராத மாற்றம். (பல விதமான வசதிகளை வீட்டுக்குள் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல சிந்தனையிலும் செயல்பாட்டிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள்) 4. தேவையற்ற ஆராய்ச்சி – இப்ப இந்த எறும்பு எங்கே போய்கிட்டிருக்கு!!!! 5. அந்நிய ஆட்களை நம்புவது – இது பெரும்பாலு ரயிலில் பஸ்ஸில் நடைபெறும். 6. எதிரியை நண்பனாகக் கொள்வது – இப்படி செய்தால் என் இமேஜ் உயரும் என்று தவரானக் கருத்தோடு அணுகி பேராபத்தில் சிக்கிக் கொள்வது.

27/02/2016: A kind word always brings victory. Being kind is worth spending noble time. Seeds sown in kind soil ripe as sweetest fruit in the world. Anbe Sivam! Gain more Sivam! Give more Sivam!!

28/02/2016: Plan everything like software programmer. Before doing a program they don’t leave any tiny aspect and also pros& cons of it so as to give perfect output. There was a saying “Look before you Leap” ஆழம் தெரியாமல் காலை விடாதே! எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் என்ணுவம் என்பது இழுக்கு – குறள். நல்லா தானே இருக்கு நாமும் follow பண்ணுவோம்.

01/03/2016: Thank you & Sorry are the two freeks we use like water. Saying “SORRY” was shame in olden days; means that we should not even do faulty things which pave way to ask sorry to another person. Likewise “THANK YOU” means it is not simple four our ancestors. Mostly they don’t depend anybody, also when they seek help they are ready to compensate more by all means before getting a help. Both SORRY & THANK YOU are just not word (in any language) it is LIFE so use it like platinum. Please take utmost care before every action and try to avoid both… Let us be role model to our next generation.

03/03/2016: பிடிச்சதை பிடிச்ச மாதிரி பிடிச்சா… பிடிச்சதுக்கு அர்த்தம் இருக்கு…ஆனால் பிடிச்சத பிடிச்சி…. பிடிச்சு வச்சுக்கலனா.. பிடிச்சது அதுக்கு பிடிச்ச மாதிரி போயிடும்….பிடிச்சத பிடிச்ச மாதிரி பிடிக்காம போனால் பிடிச்சது பிடிச்சாலும் பிடிக்காம போயிடும்…. இதை நன்றாக புரிந்துக் கொண்டு அவங்க அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குங்க இல்லாவிட்டால் பிடிச்சதை பிடிக்காதவர் சங்கத்துள சேருங்க!!! எங்க ஊர்ல இன்னைக்கு கொஞ்சம் வெயில் ஜாஸ்திங்க! Jokes Apart…. வரிகளுக்கு இடையில் படிக்க பழகுங்கள்!! இந்த வரிகளில் தான் வாழ்வின் தத்துவமே ஒளிந்திருக்கிறாது!! படிங்க தெளியுங்கள் வாழ்கையை ரசித்து வாழ்ந்திடுங்கள்.

04/03/2016: வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? Weekend வந்தாச்சு சோ எதாவது Celebrations இருக்கும் சிலருக்கு….பப்ளிக் எக்ஸாம் எழுதுற நம்ம பசங்களுக்கு எல்லாம் ALL THE BEST. அவங்கள ஃப்ரீயா விடுங்க… நல்ல தூக்கம் இருந்தால்தான் நல்ல சிந்தனையும் செயல்பாடும் இருக்கும்…

மத்தவங்கள்ளாம் வீகெண்ட் நல்லா என்ஜாய் பண்ணுங்க. கவலைக்கு Pack up! கொண்டாட்டத்துக்கு Wake up!! Start Monday with full charge!! But என்ன நடந்தாலும் என் மெசேஜ் தொல்லை இல்லாமல் உங்கள் மொபைல் இல்லை! Jai Ho!!



05/03/2016: Everyday is challenging. Don’t know what will happen next minute. So try to live the moment at your full satisfaction. 24 hours in day means 1440 minutes. We have plenty of feel within us in that கருணை, அன்பு பாசம், தயாளம் are the creative power generates positive approach & attitude. க்ரோதம், கோபம், பழிவாங்குதல் are the destructive powers generate negative approach & attitude. Life is short with lengthy valuable minutes. Spend your minutes useful to others which in turn benefit you when required!!

06/03/2016: கூண்டுக்கிளி, பட்டி முயல், புறாக்கள், போன்றவை pet animals என்ற பெயரில் பாதுகாப்பாக வளர்ப்பதாக எண்ணி கொண்டிருக்கிறோம். அதன் சுதந்திரத்தை பறித்து அவை நன்றாக வளர்க்கப்படுவதாக நினைப்பது தவறு. அது போல நம்மை சுற்றியுள்ள நல்லது, கெட்டது பத்தி யோசிக்கணும். நல்லதுனு நினைச்சு நியாயம் தர்மம் புரியாம தவறு செய்றோம். மனசு எச்சரிச்சும் கேட்காம செயல்பட்டால் தேவையில்லாத பின் விளைவுகளை சந்தித்தாக வேண்டும். சுதந்திரமா மனசு சொல்ற நல்லத கேட்போம்! நல்லா இருப்போம்!!

08/03/2016: Women’s Day!! Men inside women both are equal. So it’s the celebration of mankind. A Special day to remind gender equality! Kutti Poem written by Rajakumari. மன்ணில் இயற்கை பிறந்தது! விண்ணில் ஜகம் பிறந்தது! நெருப்பில் தூய்மை பிறந்தது! நீரில் உயிர்கள் பிறந்தன! காற்றிலே எல்லாம் கலந்தன!! எங்கும் எதிலும் நிறைந்த காற்று போன்ற பிராணவாயு பெண்!! பஞ்ச பூதத்தை நாமும் அவை நம்மையும் காக்க பெண்மை போற்றுவோம்! மனிதம் போற்றுவோம்!! Grow greener around you! Long live ‘BOOMATHA”!!

09/03/2016: How to lead happy life? 1. Accepting the way of life in which it’s travelling? 2. Accepting the people around us as they are. 3. Avoiding quarrels & argument. 4. Face the situation / environment boldly with relaxed mindset because we have to feel and accept “nothing in the world is under our control” The above said rule are applicable, when there is no problem for our self respect. Self confidence and Self Respect are the need of every common man to lead a prestigious and happy life.

10/03/2016: Success! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது முதல் படத்தில் சொன்ன முதல் வார்த்தை (வசனம்) இது நிறைய பேருக்கு தெரியும். தலைமுறை தாண்டி நிற்கும் இந்த வார்த்தை ஆங்கிலமாக இருந்தபோதும் நல்ல வரவேற்பை பெற்றது தமிழ் படத்தால தான். அதனால் ஒரு வார்த்தையோட பிரயோகம் அதை சொல்ற விதத்திலேயும் அந்த நபரோட சமுதாய அந்தஸ்து, நடத்தை பொறுத்து இருக்கு. நல்ல சொற்களையே எப்போதும் பயன்படுத்துவோம்! அடுத்த தலைமுறைக்கு உதாரணமாக இருப்போம்! நமக்கே தெரியாது நம்முடைய அந்தஸ்து எப்போ எப்படி உயரும் என்று!! எப்போதும் எச்சரிக்கையா இருப்போமா???

13/03/2016: ரசனையான வாழ்வு என்பது எளிதானது, நம் கையில் உள்ளது. என்ன ஆச்சரியமா!! இப்ப ரோட்ல நடந்து போறீங்க / பஸ்ல போறீங்க / அட வீட்ல தான் இருக்கீங்கனு வைங்க…. உங்களை சுற்றி பாருங்க…. குழந்தைகளின் குறும்பு, பெரியவங்க அடிக்கிற லூட்டி, தம்பதி – ஏன் சண்டை போடுறோம்னு அவங்களுக்கே தெரியாது (கடவுளுக்கே கூட தெரியாது) வெளியில கிளம்புற வரையிலும் சண்டை, குழாயடி சண்டையில் தெரியும் ஊராரின் வண்டவாளம், இளசுகள் அடிக்கும் நகைச்சுவை கிண்டல், இன்னும் பற்பல அனுபவ நிகழ்வுகள். இந்த மாதிரி உலகத்தை நினைச்சு சிரிக்க எவ்வளவு இருக்கு??? இதெல்லாம் யாருக்காக நடக்குதுனு நினைக்கிறீங்க சாட்சாத் உங்களுக்காகவே தான்!!! இதே மாதிரி நம்ம பண்றது அடுத்தவகளுக்கு. வாழ்க்கையே GIVE & TAKE POLICY தானே!! உங்கள் கவலைகளையும் பணத்தையும் துறத்திக் கொண்டே போகாதீங்க!! நில் …. திரும்பி பார் …. இந்த நிமிஷத்து நிகழ்வுகளுடன் பயணம் செய்யுங்கள். உங்கள் மனதை திறந்து வையுங்கள் அமைதி உங்களை தழுவும். உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வு உங்களை தேடி வந்து சொல்லும் என்னை தான எதிர்பார்த்த!!!!!

14/03/2016: நேர்மையான வழியில் நடப்பவரே சந்தோஷமான வாழ்வு உங்களுக்கு மட்டும் தான் நண்பன். நேர் எதிர் பாதையை தேர்ந்தெடுத்தாலும், தர்ம வழி இல்லாத செயல்களாலும், பார்வைகளாலும் நீங்கள் கண்டிப்பாக நிச்சயமாக துன்பத்தில் ஆட்படுவீர்கள் அதற்கு நான் கியாரண்டி. நேர்மையாக எண்ணம் கொண்டு, வாழ்ந்து, அதையே நமது பிள்ளைகளுக்கு போதித்தால் அடுத்த அடுத்த தலைமுறை பின்பற்றும், தொடர் சங்கிலியாக மாறும். சின்ன சின்ன தவறுகளை நமக்கு பிடித்தமானவர் என்ற காரணத்தினால் கண்டுக் கொள்ளாமல் விட்டால் அதுவே அதர்ம பாதைக்கான வழியாக அமைந்துவிடும். உங்கள் குழந்தை கால் தவறி தரையில் விழுந்துவிட்டது உடனே இந்த தரை தானே உன்னை அடிச்சுது திரும்பி அடிச்சுடுவோம் என்று சொல்லாமல் எப்படி நடந்தால் விழாமல் நடக்கலாம் என்று சொல்லி தாருங்கள் அல்லது அப்படி சொல்லி தருபவர்களையாவது தடுக்காதீர்கள். இது உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும். இது உங்கள் வாழ்வின் எல்லா தருணங்களுக்கும் பொருந்தும். தர்மமானது காலம், உறவுகளுக்கு அப்பாற்பட்டது, நிலையானது. காப்பது சிரமம், தவறவிட்டால் மீட்பது அரிது!!

15/03/2016: மகாபாரதத்தில் பீஷ்மர், கர்ணன் போன்றோர் கூறியது… நாங்கள் துரியோதனின் அரிசியை சாப்பிட்டு வாழ்ந்ததால் எங்களால் தீய செயல்களை தடுக்க இயலவில்லை. எங்கள் சிந்தனை சக்தி பலமிழந்துப் போய்விட்டது. அப்படினா இந்த வாக்கியத்துல நம் எண்ணங்களுக்கு அரிசி முக்கியமான பங்கு வகிக்குது. நம்ம அதை பத்தி கவலை பட தேவையில்லை ஏன்னா நம்ம தான் கலப்படமான அரிசியை சாப்பிடறோமே!! அதனால் நம் எண்ணங்களும் நல்லதுக்கும் தீயதற்கும் நடுவுல கலப்படமா தான் இருக்கு!!! அரிசியை பத்தி ஆச்சரியமான் செய்தி… நம்ம வாங்கும் போது முனை மழுங்காம கூர் உடையாம அரிசி இருக்குதா உஷார் அப்படினா அது மிஷின்ல செய்த அரிசி…. வெந்ததது, வேகாததது, காய்ச்சது, முற்றினது, பிஞ்சு எல்லா விதமான நெல்லும் போட்டு அரைச்சு மாவாக்கி, பிறகு அது ஓரே சீரான அளவுள்ள அரிசிகளா அச்சடிக்கப்படுது. ஓஹோ இது தான் அச்சடிச்ச சோறு, அவுன்சு குழம்பா!!!

16/03/2016: இன்றைக்கு ஜோக்ஸ்: எனக்கே ஒரு மாதிரி தான் இருக்கு ரெண்டு நாளா ஹெவி சப்ஜெக்ட்..ri1. கண்ணா லட்டு தின்ன ஆசையா? அப்டின்னா லட்டு… கடையில போய் வாங்கணும். 2. சைக்கிள் ஓட ரெண்டு சக்கரம், ஆட்டோக்கு 3 சக்கரம், கார், லாரி, டிரெய்லர் 4 சக்கரம், எனக்கு ஒன்னு மட்டும் அவசியம் தெரியணும் வாழ்க்கை சக்கரத்திற்கு எத்தனை வீல்!!! 3. சாங் போட்டால் வீட்ல டான்ஸ் ஆடலாம்!! சங்கு போட்டால் ஃபாக்டரியில டான்ஸ் ஆடணும்!!! 4. அமுல் பேபி குண்டா இருக்கும், அப்டினா ஆரோக்கியா, ஆவின், கவின், பேபி எப்படி இருக்கும்!!! 5. மொபைல்ல ஆப் டௌன்லோட் பண்லாம், ஆப்ல மொபைல் டௌன்லோட் பண்ணினால் எப்படி இருக்கும்!! புதுசா யாரவது டெக்னாலஜி கண்டுபிடிங்க!! வச்சோமா ஆப்பு!!!!!! JJ

17/03/2016: MUSIC stands for Mind Using Signal to Induce Concentration. So listen to good music. Music always relaxes your mind and keeps you calm. When you are in stress, worry, disturbed mood listen to good music. Do not choose rocky, heavy music at that time. Play soft music, instrumental play, carnatic music, movie melodies which makes you stay calm and concentrated. Watching comedy will relax you but solution to your problem will be given by ultimate music!! Enjoy and feel music. Live Music!!!

19/03/2016: கொஞ்சம் குழந்தையாவோமே!! இன்று தாலாட்டு பாடல். கண்ணான கண்ணுக்கு என் கண்ணே நீ கண்ணுரங்கு. சிங்காரப் பெண்ணுக்கு சீரங்கத்து சித்தாடை. உறங்காத கண்ணுக்கு ஓலை கொண்டு மை எழுதி. தூங்காத கண்ணுக்கு துரும்புக் கொண்டு மை எழுதி. ஆராரோ ஆரிராரோ ராமருக்கோ பஞ்சு மெத்தை. பஞ்சு மெத்தை மேலிருந்து அவர் வாசிச்சார் பஞ்சாங்கம். வாசிச்சார் பஞ்சாங்கம் வயசு நூறுன்னு. யாராண்ட ராஜ்ஜியத்தை பாப்பா/தம்பி ஆளப் பிறந்திருக்கோ. ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ. Good night Grown Babies!!

20/03/2016: ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்லை. நம்ம ஊர்ல சுத்துப் போட்டு கொள்ளை அடிக்கிறாங்க, அடிக்க போறாங்க… நம்ம வோட்டு போடலனாலும் பரவாயில்லை. யாருக்கு வேணுமோ அவங்க போட்டுக்குவாங்க. அப்டினா நம்ம என்னா பண்றது? NOTA ல போடுறது… (Currency note or NOTA;) சரி அப்டியே போட்டாலும் பயனுண்டா??? யாரு நிறைய இடம் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு ஆட்சி போகப் போகுது. சட்டம் சல்லடையா நிறைய ஓட்டை ஒடசலோட இருக்கு. நம்ம ஆளறவங்க சரியா இல்லாததால தமிழ்நாட்டு மக்களும் சீரான பாதையில போறதில்லை. குற்றங்களின் முதலிடமா இருக்கு. 1950 ல அட்சி செஞ்சவங்க மாதிரி யாரவது வந்தா தான் நம்ம தமிழகம் நல்வழியில போகும். சிந்திச்சு வோட்டு போடுங்க!!

24/03/2016: If we want to take a final decision for a problem devise SWOT (Strength Weakness Opportunities Threat ) analysis plan.. Check the strength – goodness if problem solved, weak – bad/worst part of the problem, Opportunity – the ways to solve the problem, Threat – stop stones to solve the problem. வள்ளுவர் சொன்னது போல தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கி செயல். Both the concept says Understand your problem, Analyse your problem, Attack your problem, Arrest your problem!! So the formula to solve the problem is :UAAA” ஊ..ல…ல…லா என் பிரச்னை தீர்ந்த்துடுச்சு!!!!!!!!!!!

26/03/2016: What is fire? When you attemp to do something you should chase behind it and achieve by any means… That drive in force is fire… எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு – குறள். Achievements are happening only to the risk taking people… Both sentences are complicated planned Vs unplanned execution of our aim… So fire is the driving force which is inside us apply it positively… Your aim will reach established great success! Try & Feel it; It’s a bliss of heart!

28/03/2016: திருக்குறள்-திருவள்ளுவர், திருவாசகம்-மாணிக்கவாசகர், தேவாரம்-அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,ஆசாரக்கோவை-பெருவாயில் முல்லியார் போன்ற ஒழுக்கம் சார்ந்த நூல், ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சாகுந்தலம், மேகதூதம் அகநானூறு போன்ற காதல் கவிகள், கலிங்கத்து பரணி போன்ற போர் பாராட்டுகள் இன்னும் பிற…… இதெல்லாம் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற இலக்கிய பொக்கிஷங்கள்! நமது அடுத்த தலைமுறைக்கான நூல்களாக நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம்!! புதிதாக ஒன்றும் இல்லை!! எல்லாமே புராணங்களையோ மற்ற படைப்புகளையோ தழுவியே எழுதப்பட்டு வருகிறது… புது நற்சிந்தனைகள் முளைக்காதா!! நம்மிலிருந்து புது காவியங்கள் பிறக்காதா!! இலக்கியம் குறித்தும் சிந்தியுங்கள்!!

29/03/2016: Relatives & Friends… Both are valuable! To maintain good relationship please don’t interfere in their personal life… If they travel in wrong path give your suggestions to correct them, press it if necessary. When you topup more advice they may get irritated. Let us keep distance. Appreciate for their good… Softly show their bad part if any! When we like them too much try to avoid short temper. பத்திரமாக பார்த்துக்கோங்க!!

30/03/2016: நாம் வாழ்ந்ததற்கான அடையாளமானது நம்மை சுற்றி உள்ளவர்கள் நினைவுக்கூறும் வகையில் இருத்தல் வேண்டும், அதற்கு நாம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.உங்களைப் பற்றி நீங்களே ஆராயந்து அத்தகைய நற்பண்பைக் கண்டறிந்து உணர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அது நல்ல புத்தகங்கள் படிப்பது, ஆழ்ந்த அர்த்தமுள்ள சொற்பொழிவுகளை கேட்பது, நம்பகமான நற்குணமுள்ள நட்பு, சமூக சேவை, தன் நலம் பேணுதல் இப்படி எந்த வகை சார்ந்திருந்தாலும் நலமே!! சில மனிதர்கள் “சுத்தம்” தனது கொள்கையாக வைத்திருப்பர், அவர்கள் எங்காவது கடற்கரை மணலில் அமர்ந்திருந்தால் கூட தான் அமர்ந்திருக்கும் பகுதியை சுற்றி சுத்தம் செய்துவிடுவர்… இது போன்று நாமும் எதோவொரு கொள்கையோடு வாழ்ந்து நிலைத்திருப்போம்!! நல்ல செயல்களை விதைத்து வளருங்கள்!!

31/03/2016: ஒவ்வொரு செயலுக்கும் தன்வினையும் எதிர்வினையும் இருக்கும் என்பது விதி!! அதனால் ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதன் சரி, தவறுகளை தீர்க்கமாக ஆலோசித்து பின் செயல்படுத்துங்கள். தங்களுக்கு சரியென்று படுவது அடுத்தவருக்கு தவறாக தெரியலாம்… சில பெரிய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு 6 மாதமோ வருடத்திற்கு ஒரு முறையோ, 360 டிகிரி தகுதி மதிப்பீடு நடைபெறும். அந்த மதிப்பீட்டின் அளவுகோல் தனது, சக ஊழியர், மேலாளர், வாடிக்கையாளர் போன்ற அந்த நபரோடு தொடர்புடைய அத்தனை முனைகளில் உள்ளோரிடமிருந்தும் பெறப்படும். அதற்கு தகுந்தாற் போல் தான் அவருக்கு பணி மாற்றம், ஊதிய உயர்வு முதலியன முடிவு செய்யப்படும். அப்படி என்றால் அவர் எல்லா கோணங்களிலும் தனது செய்கைகளுக்கு பொறுப்பானவராகிறார். இதே கோட்பாடு தான் நம் வாழ்விலும் நாம் பின்பற்ற வேண்டும். அதனால் தங்களை சுற்றி உள்ளோரின் மன உணர்வுகளைப் புரிந்து நடந்துக் கொள்ளுங்கள். வாழ்வில் வெற்றி பெறலாம். அன்பே சிவம்! வாழ்வே தவம்!!

02/04/2016; Vibrant Colours! Colours make our life meaningful and complete. Think of the world with black and white.. Please don’t imagine… Might be when we are used to an environment its adaptable for us. Some people do adverse affect of this. They make the situation fruitful to them. This type of persons can be matched with colours. Perfect ambience is given by colours only… Chose matching colors for urself and around you… Live with colours. Make your life colourful.

03/04/2016: Tamil words: Coffee - குளம்பி,Tea-தேநீர்,Soap-வழலை,Cycle-மிதிவண்டி,Car-மகிழுந்து,Shirt-மேல்சட்டை,சொக்காய்,Pant-கால்சராய்,saree-சேலை,sesame-கடுகு,fan-மின்விசிறி,tubelight-குழல்விளக்கு,radio-வானொலி,television-தொலைக்காட்சி,satellite-செயற்கைகோள்,bus-பேருந்து,conductor-நடத்துநர், மின்கடத்தி,driver-ஓட்டுநர்,Knife-கத்தி,restaurant-உணவகம்,cool drinks-குளிர்பானம்,snacks-சிற்றுண்டி,biscuit-பொறை,candy-மிட்டாய்.

04/04/2016: நா ஊறும் தென்னிந்திய பாரம்பரிய சுவையான உணவு வகைகள்: பூப்போல இட்லி புதினா சட்னி, மொருமொரு தோசையுடன் சாம்பார், இடியாப்பம் பாயா, கம்பு அடையும் கத்திரி தொகையலும், அரிசி உப்புமாவுக்கு புளி தண்ணி (அ) புளி மிளகாய், பூரி உருளைகிழங்கு, சப்பாத்திக்கு குருமா, காரஅடையும் அவியலும் (அ) மோர்குழம்பு, குழி பணியாரம் கார சட்னி, கோதுமை ரவா உப்புமா கொத்தமல்லி சட்னி, தண்ணி சாதம் சுண்டைகுழம்பு, கேப்பை கூழுக்கு சுண்டைக்காய் தொகையல் / வெங்காயம் / மாங்காய் / பச்சை மிளகாய், சோள சோறு பீர்க்கங்காய் / கொள்ளு / கத்திரிக்காய் தொகையல், வெடி தேங்காயும் வெல்லமும் சாப்பிட சாப்பிட திகட்டாது எம்மக்கா!!

06/04/2016: History in school studies boring but historical novels tempt us to know about our past world. We know the slogan “HISTORY REPEATS” so try to read culture and traditional writers / novelists books. Its like thriukkural because every aspect of life love, bravery, business, management, loyal, anger, revenge, art, culture, nature. Infrastructure, life style… Everything narrated in live mode. Travel with those people, it may help in your life in someway! LOVE, LIVE AND LEAVE HISTORY!!

07/04/2016: தமிழ்திரை நகைசுவை நடிகர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், தங்கவேலு, சந்திரபாபு, சோ, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், காக்கா ராதாகிருஷ்ணன், வெண்ணிறாடை ராம்மூர்த்தி, சச்சு, கல்லாப்பட்டி சிங்காரம், கவுண்டமணி, செந்தில், ஜூனியர் பாலையா, கோவை சரளா, விவேக், வடிவேல், கருணாஸ், சந்தானம், தம்பி ராமையா, விடிவி. கணேஷ், கஞ்சா கருப்பு…. இவ்வளவு காமெடியன் பேரு கேட்கும்போதே எதாவது ஒரு காமெடி ஞாபகம் வரும் ப்ளீஸ் அப்படியே கொஞ்சம் சிரிச்சிடுங்க!! J இப்படி தான் ஹா..ஹா.ஹ்ஹாஆஆ!!!

08/04/2016: இன்றைக்கு மெசேஜ் எதுவும் கிடையாது. மக்கள்: அப்பாடி தப்பிச்சேன், நிம்மதி, சந்தோசம்….. நான்: இவங்கள இப்படியே விடக்கூடாது? ம்..ம்.. ஒரு கேள்வி கேட்போம். கட கட குடு குடு நடுவுல பள்ளம் அது என்ன? எப்படியும் யாரும் ரிப்ளை சொல்ல போறது இல்ல…. உங்க மூளைய வீணா ஏன் கசக்குறீங்க… அது வேற ஒண்ணும் இல்ல் நம்ம பாட்டியோட ஒரு ஜிம் தான்!!! “கொடக்கல்லு” தான் அது. இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பெரிய மெசேஜ் அனுப்ப என்னால் மட்டும் தான் முடியுமாக்கும்!! J ஹா…ஹ்ஹா!!! மக்கள்: ஐயையோ என்னை விட்டுடு L L

10/04/2016: கோடை விடுமுறை என்று குதுகலமாய் நகரத்திலிருந்து கிராமம் நோக்கி படையெடுப்போம் சிறு பிராயத்தில்… சொந்த பந்தம் தேடி தாத்தா பாட்டி நாடி! குரங்கு போல் மரமேறி மாங்காய் பறித்தோம்! இலந்தை நெல்லி பொறுக்க போட்டாப்போட்டி போட்டோம்! சித்திரை வெயில் தெரியாது தோப்புக்குள்ளே ஆட்டம்! மாலை மல்லி முல்லை தோட்டம்! நம்ம பிஞ்சுகளுக்கு அந்த சந்தோஷம் தெரியல! கோடைக்கு மலைபகுதி! கொண்டாடும் பாட்டி தாத்தா அருமை புரியல! இயந்திர தோழமை ருசியில்லா வாழ்க்கை!! மாற்றிட நாம் யோசிப்போமா??

12/04/2016: When stressed just keep quiet; slowly scroll through your memory with closed eyes. Definitely you will find solution. When you close your eye you can feel the inside happenings of your soul. Take atleast 10 minutes everyday to feel your soul leading you to dharma way. It may take a long time but once settled in that path its continouous process. Please do not encourage/support your near and dear ones when they commit mistakes. This attitude will be developed by “soul watching” தர்ம துலாபாரம்!!

13/04/2016: Calender flips day by day to show do something today for the society as you born here. New Year of any lingual gives celebration mood to all people. Develop joy mood for celebration in this particular day. Tamil people encrypted their brilliance in every aspect of life, so if they choose chithirai 1 as New Year for them this day holds most important of the universe. So take positive steps towards life this New Year. Success travel with your life. Proud to be tamilan.

18/04/2016: If you want to be happy forever plan for travel around out stations or places nearby. It brings you refreshment and let you move towards next step inlife. Beauty of nature always ready to make you feel variety ambience everytime you visit the same place. Watching more new faces daily/weekly once make you feel world is big and we have more things to achieve in life. While tavel need to choose comfort vehicle sometimes, walk the other way. Enjoy all kind! Care mankind!!

21/04/2016: When the urge is genuine then somehow its succeeded. This quote is true… Whatever you want to do if your wishes are in right path for noble-cause god is waiting to fulfill that. The force behind this concept is the will power inside you and the strong thought to achieve. Success reaches the person one who is conscious and concentrated in his each and every step. Run Run stop not till your goal is achieved. Victory got by dharma path only encrypted in history! RUN WIN!

22/04/2016: மொக்கை போடுவது எப்படி? Some people in our society know very well that audience doesn’t listen them but they continue their duty sincerely… அப்படிப்பட்ட கடமை வீரர்களுக்கு நம்ம சர்கிள் பணிவான வணக்கங்களை உரித்தாக்குகிறது. உங்களுக்கு இந்த மாதிரி தெரிஞ்சவங்க யாராவது இருந்தால் சொல்லுங்க…அவர்களுக்கு நம்ம உலகத்தோட சென்டர்ல சிலை வச்சுடுவோம். அட என்னது நான் கேட்டது சரிதானா… ஐயகோ அப்படி சொல்லாதீங்க… I m crying… You are saying that’s RAJI.

23/04/2016: Nowadays advertisements are most entertaing than the actual shows. Remote got struck for ads… Choosing of cast, theme, concept, tricky shots, colourful atmosphere matching the product colour, every tiny aspect bring us attention. For ex., magnum icecream, dark fantasy, Johnson baby products… Looking business prospect of a product become common among common man. They can estimate good and bad easily. Visual communication effect!! PAARVAI JAAKRADHAI!!

25/04/2016: Development? Isn’t going step ahead from what we are now? Bring up family to next stage? Upgrade e-products, renovating house etc., get hike in career? Creating more friends circle? Conquering social sites? Roaming around with gadgets and apps? So what is development? It’s the way of carrying ourself in life; straight forward approach, transferring good qualities of our tradition to next generation… For that we have to play the R(L)oyal role! Be role model to your kids!!

26/04/2016: The Universal list… அதாங்க சகலகலா வல்லவன். Universal love – MOTHER,universal solvent – water, universal blood – O +ve, universal colour – black, universal personality – Lady Diana, universal element – soil, universal thought – patronage, universal currency – dollar, universal weapon – speech, universal union – friends, universal word – hello, universal vehicle – human mind, universal need – “peaceful sleep”, “Universal thinker – RAJAKUMARI (sender of this message)”. Please believe me its true.

27/04/2016: தண்ணி சாதம்: மத்தியான சாதத்தை வடிச்சு ஆற வைச்சு தண்ணியும் உப்பும் போட்டு ஊற வச்சுடணும். நைட் சாப்பிட போகும்போது கடுகு தாளிச்சு “நம்ம” கோடைக்கு இதமான சின்ன வெங்காயம், வெள்ளேரி பிஞ்சு, மாங்காய் எல்லாம் குட்டி குட்டியா வெட்டி அந்த ஊறி பஞ்சா இருக்குற சாதத்துல கொட்டி கிளரி சாப்பிட்டா ஸ்..ஸ்..ஸ்ஸ்ஸ் அப்பாடா என்ன டேஸ்ட்டு! சைட் டிஷ்: வறுத்த மோர் மிளகாய், சுண்ட குழம்பு, எதாவது துவையல், மாவடு, தொக்கு, ஊறுகாய், கூழ் வடவம், புளி மிளகாய், கொத்தமல்லி புளி…. எப்படி சாப்பிடணும்னு என்ன கேளுங்க!!!!!!

29/04/2016: What changes your life? 1. Study your daily routines 2. Watch your life style 3. Listen your own way of conversation with other people. 4. Feel the nature around your place. 5. Foremost think about your e-products travel with you. 6. Note your habits. 7. What are all your interests? 8. How for you have cared for your mother Earth? 9. Describe yourself without restriction? 10 Whats your participation with your family? Answer all Qs you will realize yourself. Self realisation opens door of success!

30/04/2016: Praise: Why should we praise somebody? When you whole heartedly praise others “good speech”, “clean habits”, give simple compliments like “nice dress”, “good creativity”, etc., This type of conversation not only energise the praised person you will also feel fully charged. Avoid false ego. When you praise even your enemy for his/her best performance they may become your best well-wisher. Life is short. Let us try to be peace maker instead fixing pace maker to society.

01/05/2016: Ungal Manathil Naan: 1. Cool buddy 2. Romba nalla ponnu 3. Torturous messager 4. Cute girl 5. Chutti kuzhandhai 6. Naduvula konjam disturb panra electronic thollai. 7. Self dappa 8. Free advisor 9. Chella kuzhandhai 10. Most memorable person. 11. Kurumbu kannama 12. Book worm 13. Smart worker 14. Simply wonderful 15. Nature thinker 16. Relax message parlour 17. Praise/scold no words to say Reply me plz… Election time enakkum oru nalla number pathu vote pannunga pls! J Nambunga makkale idhukku number 1, 10, 12, 13, 14, 15 thaan adhigama vandhuchu….he..he… konjam perumai dhan… J

02/05/2016: When someone lost how will you find? You have to search in the same place where you lost. I have interesting real life story. 3 people-father (75+), daughter and her husband went to srirangam temple. After darshan somehow they all missed one another. Couples met but old man missing? They remember that they all missed near a pillar. Swiftly they went near the same but he was not there. After lengthy search, they called up relative near srirangam to help them. All along searched…? Contd…

03/05/2016: Daughter was left in relation home. They told today chathurthi pray Lord Ganesh. Relative and daughter husband search till 8pm. Atlast decided 2 print “missing” poster with his photo and id as blue shirt (that day thatha wear). News informed to hero (relative son). He got the news near Cauvery palam. Just saw ranga temple gopuram and drafted a plan. By that time he doesn’t have thatha photo, only he knows relationship of thatha with him, thatha wear blue shirt that day. Hero Vs thatha…

04/05/2016: Hero search near temple for blue shirt sabapathy thatha. Strategy: Since thatha 75+ he unable to travel long distance also don’t have money so probably thatha inside temple. Hero kept 2 friends in other gate and he took position in main gate. After temple closure all people will be vacated. Slowly thatha coming with relative resemblance which hero knows. He enquired and confirmed but thatha hesitate to come. Thatha spoke to his daughter thro hero mobile, back home! Clever Hero – my husband Visvesvaran!!!! (So heroine is me only na the great “Rajakumari” J)

05/05/2016: Generally when we go with old people have to take utmost care. Our story thatha was retired head master, altered memory, enough wealth and relation but that day what was his situation if not rescued? So whenever travel to unknown place; Old people and children – photo id card with emergency mobile# to inform/contact. Atleast 20rs to make call and for a cup of tea. Adult- photo id card with emergency mobile# please memorise atleast 3 to 5 mobile# or Land line#. Atleast Rs. 100/- If patient copy of medical record!!

06/05/2016: Past 3 days story to remember us use our thinking power in tensed situation. Please don’t google and believe e-gadgets always! In this e-world without even a photo, also not even seen before, know only that name, hero find out. With photos and required force, police search for 5 hours but unable to find. But hero aalysed the pros and cons of the issue devised plan, attain target. Also Lord Ranga his intuition helped him. “Deivam manusha rupena” Every prayer has effect. Moral: common sense, Love God!

07/05/2016: There is only threadline difference between anger and tolerance!! We all know in general these 2 aspect are 2 extremes, how there is minute difference?? Let a kid split coffee on floor, what elders will say “kid innocent, so leave” – tolerance. If same action by grown person “don’t have sense, why do you do like this bla..bla..blah” – anger. So action not judged…. Whos doing? How it affects? So let us prepare our mind to handle the issue as required rather instantly reacting to it!

08/05/2016: Agni natchathrathula mazhai!! Heat negative, cold positive. I think our maths formula “- x - = +” workout agidichu polaruku. Heat and over heat product output as chill rain – need of today! In a Tamil film “VIRUMBUGIREN” hero is fireman. When fire caught in sugarcane field; he again set fire from other side of the field. Both side fire come closer and put off. Here also same formula applies. So ultimately this was my thinking today. So what is your feel about me? Nothing guys…. but Sunday special!! J

09/05/2016: Difference between simple living and simply living… Letter e & y is general difference by word but E come 1st in alphabet Y come last. We always like to come first. Also E is the 5th letter means our life is associated with 5 elements. Y is 25th; means its 5 times E. Living with E is best choice. Since too much of anything is good for noting, exit from Y. Choose simple living E is ‘Economy’ so don’t believe Y ’Luxury’! Lif(E)!!!!





N- NATURE

18/02/2016: பல நூறு வருடங்களுக்கு முன் நமது பூமித்தாய் தன்னிடம் வளமான கனிமம், நிலக்கரி, எண்ணெய் கிணறுகள் மலைக்காடுகள், பல வித நீர் நிலைகள், இயற்கை வளம் போன்ற பெருஞ்செல்வங்களை சேர்த்து வைத்திருந்தாள். பூமியானது ஒரு இனிமையான வாழ தகுந்த கிரகமாக பால்வீதியில் அமைந்திருந்தது. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி வளமானதை பேரிடர் விளைவிக்கும் தூங்கா நகரங்களாக மாற்றி விட்டோம்!! இவ்வாறு சிறிதுசிறிதாக மாபெரும் குற்றங்கள் செய்து வந்த நாம் ஒன்றை மறந்துவிட்டோம்!!! சிறு உயிரினங்கள் மட்டுமல்ல மனிதர்களாகிய நாமும் வாழ தகுதியில்லாத ஒரு கிரகமாக இந்த பூமியை மாற்றி வருகிறோம்!!!

19/02/2016: திருவாசகம்: “புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகி … செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்…… நாம் பாசி, மண்புழு இவற்றிலிருந்து தொடங்குவோம். பாசி ஒரு நீர் வாழ் உயிரினம், மீன் அதனை உண்டு நீரை சுத்தம் செய்கிறது. இயற்கையான சுத்தமான நீர் மரம் செடி கொடிகள் வளர்வதற்கு ஏதுவாக இருக்கின்றது. ம்ண்புழு இயற்கையாக விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய உழவன். அது மண்ணை நன்றாக உழுது வளமான மண்ணாக மாற்றுகிறது. ஆனால் நமது கவனக் குறைவால் இவற்றை அழித்து வருகிறோம். இவற்றை மீண்டும் இந்த உலகத்தில் நிலை நாட்டி நம் இயற்கையை வளப்படுத்த நம் செடிகளோடு சேர்த்து இவற்றையும் வளர்க்க வேண்டும். காய்கனிகளை வாங்கும் முன்னர் அதில் புழு, பூச்சி இருக்கிறதா என்று சோதித்து வாங்குங்கள், இவையே தரமான காய்கனிகள். மிகுந்த பளபளப்போடு காணப்படும் காய்கனிகள் செயற்கை அரிதாரம் பூசிய மனிதர்களை போல! ஜாக்கிரதை!!!

20/02/2016: நீங்கள் தும்பியை பார்த்திருக்கிறீர்களா?? நம் குழந்தைகளுக்கு தூக்கனாங்குருவி, சிட்டுகுருவி, மரங்கொத்தி, குயில், தேன்சிட்டு, ரெட்டைவால் குருவி மற்ற புழு வகைகள், நீர் வாழ் உயிரினங்கள் போன்ற ஜீவன்களைப் பற்றி தெரியுமா?? இவை மகரந்த சேர்க்கைக்காக உதவுகின்றன என்ற உண்மை விளங்குமா?? இந்த செயல் நடைபெறாவிடில் உலக இயக்கமே ஸ்தம்பிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்ற உண்மை புரியுமா?? இந்த உயிரினங்களை பாதுகாக்க நாம் நமது சொகுசு வாழ்வை சிறிது தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.!! குறிப்பாக நாம் பயன்படுத்தும் மின்சாதனங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு என்ற பெயரில் நாம் வைத்திருக்கும் அலை கோபுரங்கள் எத்தனை!!! இந்த மின் பொருட்கள் வெளியிடும் நச்சுகளால் இவை மறைந்து அருகி வருகின்றன!! மாற்றங்கள் தேவை அவை இயற்கையோடு இயைந்ததாக இருக்க வேண்டும். இயற்கைக்கு எதிராக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பல மடங்கு இடியாக நமக்கு எதிராக நாமே வைத்துக் கொள்ளும் வெடி!!!

21/02/2016: மின் சாதனங்களால் உலகம் வெப்பமயமாதல் மட்டுமல்லாமல் நமக்கும் தோல் வியாதிகள், வறண்ட சருமம், சத்து குறைபாடுகள், புற்றுநோய், இளமையிலேயே நரம்பு தளர்ச்சி, கண் கோளாறுகள் போன்ற பல நோய்களும், தளர்ச்சியும் நம்மையும் தாக்கும். நவீன உலகத்தின் பிரதிநிதியான நாம் மின் மனிதனாக மாறி வருகிறோம். ஆனால் வேலை நேரத்திற்கு பிறகாவது சாதாரண மனிதனாக வாழலாமே!! வெறும் காலோடு புல் தரையிலோ, கடற்கரை மணலிலோ, கோவில் பிரகாரத்திலோ நடக்கும் இன்பமே தனி சுகம். அந்த குறுகுறுப்பை அனுபவியுங்கள். இயற்கை அன்னை தன் மடி விரித்து எப்போதும் காத்திருக்கிறாள். அவள் மடியில் தஞ்சம் புகுந்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்வின் அனைத்து துக்கங்களையும் தயக்கங்களையும் அவளிடம் சொல்லுங்கள்!! உங்களின் சொந்த தெளிவான சிந்தனைகளை தூண்டுவதின் மூலம் சரியான தீர்வை அவளே தருவாள்!!! இயற்கையை நேசியுங்கள்!! இயற்கையோடு வாழுங்கள்!!!

22/02/2016: தொல்காப்பியம்: இது ஒரு பழமையான புத்தகம். பல வித செறிவான கருத்துகளை தன் அகத்தே கொண்ட கருத்து பேழை.

புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (572)

நந்து முரளு மீரறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (573)

சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (574)

நண்டுந் தும்பியும் நான்கறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (575)

மாவும் புல்லும் ஐந்தறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (576)

மக்கட் டாமே யாறறி வினவே பிறவு முளவே அக்கிளைப் பிறப்பே (577)

பெரிய பரிணாம வளர்ச்சி தன்னை விட சிறியதை தனக்கு உணவாக கொள்ளும். (உதா.,) ஆறறிவுள்ள மனிதன்; ஓர் அறிவுள்ள மரம், செடி முதல் ஐந்தறிவு விலங்கு வரை தன்னுடைய உணவாக கொள்கிறான். இது இயற்கையே அமைத்த உணவு சக்கரம். எப்போதும் சமச்சீரான உணவையே எடுத்துக் கொள்ளுங்கள். குறைவாகவோ, மிக அதிகமாகவோ உட்கொள்தல் தைராய்டு, ஒவ்வாமை, எடை கூடுதல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும். “பசித்தபின் புசி” என்ற தாரக மந்திரத்தை உருவேற்றுங்கள், கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிடாதீர்கள்!! உங்கள் சாப்பாட்டு திட்டத்தை உங்களால் விளைவிக்கக் கூடிய மீண்டும் மீண்டும் உங்களாலேயே உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள், கனி வகைகள், கீரை வகைகள் போன்ற இயற்கை பொருட்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள். உங்களால் சுயமாக உருவாக்க முடியாத மாமிச உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். அவ்வாறு செய்வதால் அந்த ஜீவன் பிழைத்து இந்த பூமிக்கு அதனால் செய்யக் கூடிய செயல்களை செய்ய நீங்கள் உறுதுணை செய்தவர்களாக ஆவீர்கள். இன்னொரு நன்மையும் உண்டு. இது தான் கோழி, ஆடு என்று புத்தகத்திலாவது உங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கலாம்!!!

25/02/2016: நன்றாக தெரிந்த பூ பெயர்கள்: ரோஜா, மல்லிகை, முல்லை, சாமந்தி, ஜவ்வந்தி, பிச்சி, விச்சி, பவழமல்லி, செம்பருத்தி, சம்பங்கி, தாமரை, அல்லி, அரளி, மஞ்சள்பட்டி, நந்தியவட்டை, சங்குபூ, நாகலிங்கபூ, கொன்றை, மரமல்லி, குறிஞ்சிபூ, மகிழம்பூ, டிசம்பர்பூ, அந்திமல்லி, தாழம்பூ, மனோரஞ்சிதம், சண்பகம், கோழிக்கொண்டை, பாதிரி, கருங்குவலை, மயில் மாணிக்கம், சூரிய காந்தி… (இதை தவிர இந்திய பூக்கள் ஏதேனும் தங்களுக்கு தெரிந்தால் இங்கு பதியலாம், அவை மேற்சொன்ன பூக்களிம் மற்றொரு பெயராகவோ/வகையாகவோ இருக்கக் கூடாது (உ.தா.,) 1. ஜாதிமல்லி, சந்தன முல்லை போன்று, 2. டோரியா, ஆர்கிட் போன்ற பூக்கள் இந்த பட்டியலில் இடம் பெறாது, பொறுத்தருள்க!!!!)

02/03/2016: மலையருவி, குற்றால அருவி, கரை தொட்டு கொண்டு ஓடும் பொன்னி நதி, நெல்லையின் தாமிரபரணி, வைகையாற்று வெள்ளம், பால் போல் பொங்கி வரும் பாலாறு, கடலாடும் கொள்ளிடம், வீரநாராயணன் ஏரி, பொன்னேரி, திருத்தலங்களின் தீர்த்தங்கள், இன்னும் பல…பரந்துப்பட்ட இம்மாநிலத்தில் தகிக்கும் வெயிலில் அவதிப்பட காரணம்??? இருக்கும் தண்ணீரை சரியான முறையில் பராமரிக்காதது தான். தண்ணீர் மேலாண்மையும், காட்டுவள மேலாண்மையும் முறைபடுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டால் நம் அடுத்த தலைமுறையினராவது தன் இருப்பிடத்திலிருந்தே இயற்கையின் குளுமையை அனுபவிக்க முடியும். கோடைக்கு எந்த மலை பகுதிக்கு செல்லலாம் என்று பண மூட்டை சேகரிக்க தேவையில்லை!! மணலில் சிப்பிகள் பொறுக்கி பிள்ளைகளோடு விளையாடி மகிழ்ந்திருக்கலாம்!!

11/03/2016: ஆர்கானிக் (ரசாயனம் சேர்க்காத பொருட்கள்) என்றால் என்ன? எதற்கு? உங்கள் ஆர்கானிக் பொருட்களை தேர்வு செய்வதற்கு முன் சரி பார்க்க பட வேண்டியவை: நிறம், வாசனை, சுவை வைத்து அறிந்துக் கொள்ளலாம். (உ.தா., தக்காளி வாங்கும்போது நல்ல சிகப்பு நிறமுள்ள தக்காளியாக வாங்க வேண்டும். மரபு சேர்வையால் உருவாக்கப்பட்ட தக்காளி அதிக சிகப்பாக இருக்காது, பக்சை ஓடியதாகவும் இருக்காது, தக்காளிக்கான வாசனையும் அதில் இருக்காது. நீங்கள் ரசம்/சாந்து தயாரிக்கும் போது கொதிக்கும் தண்ணீரில் தக்காளியை போட்டால் அது தானாக 2 நிமிடத்தில் வெந்துவிடு, ரசத்தின் மணமும் வீட்டை நிறைக்கும். மரபுத் தக்காளி/உரம் விட்ட தக்காளி அவ்வளவு சீக்கிரமாக வேகாது. ஏனெனில் அவை நாட்பட இருப்பதற்காக தயாரிக்கப்பட்டவை. கொத்தமல்லி இலை; இலைகள் மெல்லியதாகவும், சிறுசிறு செடிகளாகவும் இருப்பவயே உரம் இடப்படாத கொத்தமல்லி. மிகவும் வளர்த்தியாகவும், தடிமனான காம்புகளை உடையதாகவும் இருப்பது உரமிட்ட கொத்தமல்லி. அவற்றிற்கு சத்தோ, சுவையோ இருக்காது. எந்த உணவுப் பொருட்கள் உங்கள் உணவின் உண்மையான சுவையை தரவில்லையோ அவை எல்லாமே கலப்படமானவை. இவைகளை வைத்து நமது இல்லத்தரசிகள் தரும் உணவு இந்த அளவுக்கு சுவையாக இருப்பதே அதிசயம் தான்!! முடிவு உங்கள் கைகளில்!!!

12/03/2016: இன்று நம் சுற்றுசூழலைப் பற்றி சிந்திப்போமா!! நாம் வாழ்வதற்கு அழகான தகுதியான வலிமையான ஒரு இடமாக நம் பூமி இருந்தது. அவள் தன்னகத்தே உள்ள ஜீவஙன்களின் மேல் மிகுந்த பற்றுக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குபவளாய், பேரிடர்களுக்கு இடம் கொடுக்காத வண்ணம் காத்தருள்பவளாய், இயற்கை எழில் கொஞ்சும் பேரழகியாய் திகழ்ந்தாள்!! எங்கெங்கு மனிதனின் கால் தடம் பதியவில்லையோ அங்கெல்லாம் இன்றும் கூட அழகோடு மிளிர்கிறாள். சிவப்பு வண்ணத்திலான ஓடும் நதியோ, வர்ணஜால்ங்களை அள்ளி தெளிக்கும் அருவிகள் இன்றும் கூட உள்ளன. அவற்றிற்கு காரணம் அங்குள்ள அமீபா, பாக்டீரியா, சில தாவரங்கள். அவை மனிதன் காலடி பட்டால் கற்பனை கனவாகவே போய்விடும். நமக்கு இடையூறு விளைவிக்காமல் காக்கும் நம் பூமிக்கு நமது நல் எண்ணங்களை விதைப்போம்!! தீய எண்ணங்கள், நடத்தை, செயல் யாவும் சேர்ந்து கலவரம், புயல், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் உருவாக காரணமாகிறது, ஏனெனில் இயற்கை ஒரு அளவுக்கு மேல் தீமைகளை தாங்குவதில்லை, அதனுடைய வெளிபாடு, அறிகுறி தான் பேரிடர்கள். இப்போது பூமி தாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறாள். அன்பு, சுத்தம், நல்லெண்ணங்கள், பசுமை போன்ற சுகமான உணர்வுகளால் அவளை தாலாட்டி மீட்டெடுப்போம். நம் அடுத்த தலைமுறைக்கு தகுதியான பூமியை பரிசளிப்போம்!! எப்போதும் பண்போடு வாழுங்கள்! வளமான பூமியை வார்த்தெடுக்க புறப்படுங்கள்!!

22/03/2016: இன்று உலக தண்ணீர் தினம். அப்டின்னா தண்ணீரை சேமியுங்கள், வீணாக்காதீர்கள் இதெல்லாம் நமக்கே தெரியும். ஆனால் பின்பற்றுவோமா!! அதனால் நாம என்ன பண்றோம்னா தண்ணீரை சேமிக்க உறுதிமொழி எடுப்போம். ஏன் இதெல்லாம் செய்றோம்னு தெரியுமா??? நம்ம உலகத்துல மனித பயன்பாட்டுக்குனு உள்ள தண்ணீர் 2% அளவு தான் இருக்கு. மற்ற தண்ணீரெல்லாம் உப்பா இருக்கு, பனிப்பாறையா இருக்கு, உறை நீராக இருக்கு. இதுல என்ன விந்தை தெரியுமா. இந்த பனியா இருக்கிறது, உறைஞ்சு இருக்கிறது எல்லாம் உருகுச்சுன்னா நிறையா தண்ணீர் கிடைக்குமாம் ஆனால் அதை பயன்படுத்த நாம தான் உசுரோட இருக்க மாட்டோமாம் ஏன்னா நம்ம தான் அதுல முழுகி இறந்துடுவோம்ல. இப்பவே ரொம்ப நெருக்கடியான நேரத்துல பயன்படுத்த வேண்டிய நிலத்தடி நீரை குழாய் போட்டு உறிஞ்சு அதுவும் தீர்ந்துக்கிட்டே வருது. அதனால நாம என்ன செய்றோம்!! நிறையா மரம் வைக்கிறோம். நாம அழிச்ச மரங்களே நாமே நட்டுட்டோம்னா நம்ம பிழைச்சுக்கிறதுக்கு வழி இருக்கு. காடுகளை உருவாக்குவோம்!! புவி வெப்பமடைதலை தவிர்ப்போம்!! தண்ணீரை சேமிப்போம்!! ஒரு செயலால் விளையும் இரு நன்மைகள்…



P-POEM



23/02/2016:

கோடையில் மழை சின்ன சந்தோஷம்!

வாடையில் காற்று சின்ன சந்தோஷம்!!

குழந்தையின் குறும்பு இன்ப சந்தோஷம்!

குட்டி குட்டி பூக்கள் வண்ண சந்தோஷம்!!

பொங்கல் நடுவில் முந்திரி சின்ன சந்தோஷம்!

பிறந்தநாள் வாழ்த்து சின்ன சந்தோஷம்!!

பிடித்த பாட்டு FMல் வந்தால் சின்ன சந்தோஷம்!!

பிரியமுடன் வம்பு செய்தால் சின்ன சந்தோஷம்!

இப்படி சின்ன சின்ன சந்தோஷம் நம்மை சுற்றி இருக்குது!!

கண்டு நீயும் புடிச்சிக்கோ!! சந்தோஷத்தை வளர்த்துக்கோ!!

Manasae Relax Please (MRP) MRP here Y fear!! – Raji



24/04/2016: கண்ணே வெயில்!

நான் உனக்கு எழுதும் லெட்ட்ர்.. ச்ச மடல்.. ச்சீ.. கடிதமே இருக்கட்டும்!

உன்னை எண்ணி பார்க்கும்போது கவிதை அருவி மாதிரி கொட்டுது!

ஆனால் உஷ்ணத்தால எல்லாம் வறண்டு போச்சு!!

நடுவுல மானே தேனே பொன்மானே போடலாம்னா மனசு கேட்கல!

த பாரு உனக்கு இந்த உஷ்ணம் தாங்கலாம் என் உடம்பு தாங்குமா!!

ஏய் அருணா! நீ தேரோட்டியா இருந்து என்ன பண்ற!

உஷ்ணத்தை குறைக்க கொஞ்சம் சிபாரிசு பண்ணு!!

மனிதர் தாங்கி கொள்ள இது சாதாரண வெயில் அல்ல அல்ல!

அதையும் தாண்டி கொடுமையானது கொடுமையானது!! - Raji

28/04/2016: வர்ண ஜாலங்களைப் பார்க்க கல்யாணம் பாருங்கள்! கலைஞனின் கைவண்ணம் கல்யாணத்தில் ஜொலிக்க!

கைவண்ணமே இல்லாமல் மணமக்கள் ஜொலிக்க!

மகிழ்ச்சி பொங்கும் மங்கலம் தங்கும்!

வண்ண மயில்கள் சுற்றிவர வண்ணங்களை அள்ளி தெளிக்க!

விளக்குகளின் வெளிச்சத்தில் பூலோகம் தேவலோகமாய் மின்ன!

வெளிச்ச புள்ளிகளின் மத்தியில் வெண்ணிலா சிரித்திருக்க! சுடர் விடும் சூரியனோ குளிர் வதனம் காட்டிடுவான்!

திருமணங்கள் பாருங்கள்! குளிர்மனமாய் வாழுங்கள்!! - Raji



10/05/2016: அன்பே சிவம்! ஆனந்தமே நிதம்!!

இன்பமே வரம்! ஈவதே நலம்!!

உண்மையே பலம்! ஊக்கமே வளம்!!

எளிமையே இனம்! ஏற்பதே ஜெயம்!!

ஐயமே பயம்!!

ஒன்றுதே உளம்! ஓரிடம் ஜகம்!!

ஓளஷதம் ஜலம் ஜலம் ஜலம்!! –

(This poem written by myself – Rajakumari) Meaning: Love is God, smile daily, happy is gift, giving is good, truth is strength, motivation is wealth, simplicity is ours, accepting is victory, doubt is fear, heart merge to one place – world, for all disease water is the best treatment!





H-HEALTH



11/01/2016: 8 விதமான யோகங்கள்: இயமம், நியமம், ஆதனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி. இவையே ஞானத்தை அடைவதற்கான சன்மார்க்கமாக திருமந்திரம் சொல்கிறது. இதன் மூலமாக தெய்வீக தன்மை பெறக் கூடிய ஆற்றல் வலுப்பெறும். இவ்வாறு செய்வதால் நாம் துறவறம் ஏற்க வேண்டும் என்பது பொருள் அல்ல. இவ்வகை யோகங்களை முறையாக பயில்வதன் மூலம் நமது கவலைகளுக்கும் துன்பங்கள்க்குமான தீர்வை நாமே தேடிக் கொள்ளவும், நம்மை சுற்றி அந்த அதிர்வலைகள் பரவவும் நாம் வழி செய்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

12/01/2016: “பசி வந்திட பத்தும் பறந்து போகும்” என்பது பழமொழி மனித உடனின் நாடிகள் பத்து இவை தான் நமது செயல்களுக்கு காரணம். அவை செயல்படாவிடில் வாந்தி, மயக்கம் சோர்வு போன்ற தொல்லைகள் நம்மை ஆட்கொள்ளும். பசி வந்ததும் “சிங்குவை” நாடி மற்ற நாடிகள் இடகலை, பிங்கலை சுழிமுனை, புருஷ, காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு ஆகியவற்றை மயங்க செய்யும். ஆகவே உணவை மறுதளிக்காதீர்கள்.

12/01/2016(1): Health benefits of exercise: Know the calories (cal) burnt… Walking – 2.5mph (miles/hour) – 3.6 cal, running – 10mph – 15 cal, cycling – 13mph – 5 cal, swim – 20yards/minute – 11 cal, Daily meditation for half hour gives peaceful mind and energy for whole day. Healthy and active mindset also service to society. THINK & ACT J

23/01/2016: அறுசுவை மிகினும் குறையினும் நோய் உண்டாகிறது. “துவர்ப்பு குறைந்தால் காமாலை வரும், உவர்ப்பு குறைந்தால் வயிற்றுவலி உண்டாகும், இனிப்பு குறைந்தால் உடல் மெலியும், புளிப்பு குறைந்தால் உறக்கம் குறையும், கசப்பு குறைந்தால் அடிக்கடி காய்ச்சல் வரும், காரம் குறைந்தால் சீரணக் கோளாறு உண்டாகும்” உடல் ஆரோக்கியமே முக்கியம். சுவர் இருந்தால் தான் சித்திரம். பத்திரமா பாத்துக்கோங்க!!

29/02/2016: வெட்டிவேர்: இந்தக் கோடைக்கு ஏற்ற அருமருந்து. குடிநீரில் போட்டு வைத்து அருந்தினால் நாவரட்சி, சோர்வு நீங்கும், உடலும் மனமும் குளிரும். சாளரங்களுக்கு/கதவுகளுக்கு தட்டி போல் அமைத்தால் குளிர்ந்த காற்று வீட்டை தாலாட்டும். ஹோமக் கலசங்களில் இதனை பயன்படுத்துவர். அது நமது பிரார்த்தனைகளுக்கான நல்ல எண்ணங்களின் அதிர்வலைகளாக பரவும். உடலின் உள் சென்று, உடல், மனம் ஆத்மா, புத்தி, சுற்றுபுறம் யாவற்றையும் சுத்தம் செய்து புத்துணர்ச்சி பரவச்செய்யும். அனுபவித்து உணருங்கள்!!

21/03/2016: பழங்கள்: மாம்பழம், வாழை, பலா, ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, பப்பாளி, அன்னாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம்பழம், வெள்ளேரிப்பழம், தர்பூசணி, கிர்ணி, மங்குஸ்தான், சப்போட்டா, ஸ்ட்ராபெரி, ராஸ்ப்பெரி, ப்ளூபெரி, முந்திரி, வால்பெரி, பேரிக்காய், பெரப்பம்பழம், பியர்ஸ், விளாம்பழம், நவாப்பழம், பட்டர்ஃப்ரூட், கிவி, செரி, பம்பிளிமாஸ், எலுமிச்சை, லிச்சி, பீச்………. இதுல எதாவது ஒரு பழமாவது தினமும் சாப்பிட்டு உடம்பை தேத்துங்க!! நம்ம வீட்ல இருக்குற வயதானவர்களை போன்றே பழமும் (பூவிலிருந்து கனி வரை) இரண்டுமே மிகவும் பயனுள்ள பொக்கிஷங்கள். பத்திரமா பாத்துக்கங்க.

01/04/2016: Obesity is the main cause of new disease emerges all over the world. Reason behind this issue: dependency of other people for our basic work/need, reheat cooked food, pasteurized, pocketed products in(de)crease the actual content of nutrition value. Above said are slow poisons to create bad cholesterol, abnormal glucose, blood pressure variation. All these attack abdominal areas induce its malfunction, result in variety of disease. So take fresh food properly with balanced working style!

05/04/2016: பத்து வாயுக்கள் நம் உடலில் உள்ளன. அவற்றுள் பிராணன் – சுவாசத்திற்கும், செரிமானத்திற்காகவும் செயல்படுகிறது, அபானன் – நல்ல சத்துகளை உறிஞ்சு எடுத்துக் கொண்டு கெட்ட சத்துகளை வெளியேத் தள்ளுகிறது, உதானன் – நல்ல சத்துகளை உடலெங்கும் கடத்தி செல்லுகிறது, சமானன் – மற்ற வாயுக்களில் ஏற்படும் பற்றாக்குறைகளை சீர் செய்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது, வியானன் – முழு உடலையும் காத்து தசை, எலும்பு வளர்ச்சி மேம்படவும் சீராக இயங்கவும் உதவுகிறது, நாகன் – கண் பாதுகாப்பிற்கும், கண் இமைப்புக்கும் காரணி, மூளையின் கிரஹிப்புத் தன்மைக்கும் உதவுகிறது, கூர்மன் – கொட்டாவி, அழுகை, வியர்வை சுரப்பி போன்ற நச்சு நீக்கியாக செயல்படுகிறது, கிருகரன் – உமிழ்நீர் சுரப்பி, தும்மல், இருமல் போன்றவற்றிற்கு பொறுப்பேற்கிறது, தேவதத்தன் – கோபம், எச்சரிக்கை போன்ற உணர்வுகளின் ஊக்கி, தனஞ்சயன் என்ற வாயு தான் நாம் உயிருடன் இயங்குவதற்கு காரணமாக நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் செயல்படும் ஓய்வில்லாத காற்று. இந்தக் காற்றுகளைப் பற்றி நன்றாக உணர்ந்து ஆரோக்கியத்தோடு வாழ்வோம்!!

15/04/2016: Pranayamam: Inside our nose moist layer and tiny hair protect us from dust particles in the air. Pranayama is the balancing of the breath in and out. 3 steps of breathe resakam-breath out, pooragam-breath in, kumbagam-sustain breath. Human breath daily 21600 times. According to siddha breath and 7 aadharam are linked. We breath through moolaadharam-600, swadhitanam-6000, manipooragam-6000, anagadham-6000, visukthi-1000, aakinai-1000, duriyam-1000 total 21600 times daily. Continued tomorrow. Breath deep!!

16/04/2016: According to siddha human breathing time through 7 aadhaaram: moolaadharam – 6am to 6.40am, swadhitanam-6.40am to 1.20pm, manipuragam-1.20pm to 8.00pm, anagadham-8.00pm to 2.40am, visukthi-2.40am to 3.46am, aakinai-3.46am to4.53am, duriyam-4.53am to 6.00am this breath happens automatically. Breathing time and no. of times is just information for us. Let us try to feel the universal happenings inside our body. Swasipom aazhamaga! Nesipom menmaiyaga!!

17/04/2016: Why are we breathing? If not what happens? Do we feel that we are breathing… It’s an automatic process designed by nature. Many more emotions bombard us that we may fail to breathe, thats why nature relieved us from that WORK. Concentrate more on healthy and worthy elements of life and society to thank nature. Please watch your breath atleast 10 minutes daily without disturbing it. This will bring lot of changes in and around you. Soul and Swas watching makes life peaceful! Enjoy it!!







D-DIVINE



23/01/2016: இன்றைக்கு என்னுடைய தெய்வீக அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். திருவானைக்கோவில் தைத்தெப்ப திருவிழா. எங்கள் உறவினரின் உபயம் ஆதலால் சுவாமி அம்பாளுடன் நானும் தெப்பத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக நான் தெப்பத்தில் செல்வதால் எனக்கு தெய்வீக அருளாகவும் புது அனுபமாகவும் உணர்ந்தேன். தெப்பம் தமிழனின் அருமையான கண்டுபிடிப்பு. இது போன்ற அருமையான நீர் வாகனம் யாரும் கண்டுபிடிக்கவில்லை. இது பண்டைய தமிழரின் வழக்கத்தில் உள்ளதால் அதற்கான சான்றுகள் நம் தெய்வீக நூல்களில் இடம் பெற்றுள்ளன. யாரும் கொள்ளையடித்து காப்பீட்டு உரிமம் கோர முடியாது!! வாழ்க தமிழர்கள்! வளர்ந்து செழிக்க தெய்வ பக்தி!!

11/04/2016: இன்று திருஆனைக்கா அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் “வெள்ளை சாற்றி உற்சவம்” ஸ்வாமி அம்பாள் புறப்பாடு. பஞ்சமூர்த்திகளுக்கும் வெள்ளை வஸ்த்ரம்/வெண்பட்டு சாற்றப்பட்டு, வெள்ளை மலர்களால் அலங்கரிக்கபட்டு ஜகத்ஜோதியாக திகழ்ந்தார்கள். அவர்களின் முக மலர்கள் மட்டுமே கண்ணுக்கு புலப்பட்டன. தலை உச்சியில் சந்தனம் சாற்றப்பட்டு இருந்தது. தூய வெள்ளை மலர்கள் மல்லிகை, முல்லை, வெண் தாமரை, வெள்ளை சம்மங்கி போன்ற வாசனை மலர்களாலும் திரவியங்களாலும் இறைவனும் இறைவியும் அலங்கரிக்கப்பட்டு தூபதீப ஆராதனைகள் செய்யப்பட்டன. இந்தப் பேரழகைக் காணக்காண என் கண்கள் அந்தக் கண்கொள்ளாக்காட்சியை விட்டு அகல மறுத்தன. இவற்றோடு கூட கயிலை வாத்தியங்களும் சேர்ந்துக் கொண்டு அந்த இடத்தையே பக்தி வெள்ளத்தில் மூழ்க செய்துவிட்டன. தெய்வப் பரவசமாக வாழுங்கள்!!





GT-TRADITIONAL



09/01/2016: 3000 years old history. Mohenjo-Daro building plan to clear waste water; there will be a channel built from each home to connect a street canal. That street canal will be connected to particular place where a square shaped small gap will be fixed to have a inbuilt “THAAZHI” (a pot like structure) with holes. Water will ooze out through holes at the bottom and the Thaazhi will contain the collected wastes which are cleared often. Our ancestors are really brainy and concerned about cleanliness. Let us follow them.

27/01/2016: நவ புண்ணியம் – 1. எதிர் கொள்ளல் – விருந்தினரை வரவேற்பது, 2. பணிதல் – விருந்தினருக்கு வேண்டியவற்றை செய்து தருதல், வயதில்/அறிவில் பெரியோரை வணங்குதல், 3.இருக்கை உதவல் – விருந்தினருக்கு ஆசனம் அளித்தல், 4. கால் கழுவல் – காலை சுத்தம் செய்ய தண்ணீரும், கால் துடைக்க துணியும் தருதல், 5. அருச்சித்தல் - பூக்கள் கொண்டும், நல்ல வார்த்தைகள் கூறியும் பராட்டுதல், 6. தூபம் காட்டுதல் – சாம்பிராணி போடுதல், வாசனை திரவியங்கள் அளித்தல், 7. தீபம் காட்டல் – தீபம் ஏற்றி வைத்தல், தியானம் செய்தல், 8.புகழ்தல் - அவர்கள் மகிழும் வண்ணமாக அவர்களின் சிறப்புகளை கூறி வணங்குதல், 9. உண்டி ஈதல் – சிறப்பான உணவு அந்தந்த வேலைக்கு தகுந்தாற் போல வயிறு குளிறும் வண்ணம் வழங்கி மகிழ்தல். இவையே விருந்தினரையும், பெரியோரையும், துறவிகளையும் வரவேற்கும் முறையாக நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். இதுவே நம் தமிழர் பண்பாடு! கண்டிப்பாக கடைபிடிப்போம்!! புண்ணியம் சேர்ப்போம்!!!

30/01/2016: வணக்கம் சொல்லும் தமிழ் பண்பாடு நமக்கு முன் இருப்பவரை நல்ல முறையில் வரவேற்பதற்காக அமைந்த ஒரு இங்கித நடைமுறை. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நாடுகளுக்கும் சென்று அடைந்தது. தமிழரின் வணங்கும் முறை. கைகளை கோபுரம் சேர்ந்து இருப்பது போன்ற அமைப்பு மிக சக்தி வாய்ந்த ஆயுதமாகும். அது நம்மையும் நம் எதிரில் இருக்கும் நபரின் தீய எண்ணங்களை களைந்து நல்வழி படுத்தும்; 10 விரல்களில் இருக்கக் கூடிய சக்கரங்கள் உள்ளங்கையுடன் இணைந்து நடத்தும் அறப்போர். அதனால் நாம் வணக்கம் சொல்வதின் பொருள் உங்களுக்கு விளங்கியிருக்கும். இது மேலே சொன்ன மற்றொரு கருத்துப்படி நல் எண்ணங்களை விதைத்து பூமி தாயை காக்கும் முயற்சியாகும். பழகுவோம்!! பலன் பெறுவோம்!!!

07/03/2016: இன்று சிவ(சித்தர்)ராத்திரி. பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஒரு மனிதனுக்கு தீராத தலைவலி இருந்தது. அது பல நாட்கள் நீடித்தது. பலவித வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. கடைசியில் சித்த மருத்துவ நிபுணர் ஒருவரிடம் காண்பித்தனர். அவர்கள் நீண்ட பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று முடிவு செய்து தலையை (கபாலம்) திறந்தனர். உள்ளே சமர்த்தாக ஒரு தேரை (தவளை இனம்) உட்கார்ந்து கொண்டிருந்தது. செய்வதோ அறுவை சிகிச்சை அதுவும் தலையில் எந்த கூர்மையான ஆயுதமும் பயன்படுத்த முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கும்போது ஒரு சிஷ்யர் மட்டும் அங்கிருந்து வேகமாக ஓடினார். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து நோயாளியின் தலைபக்கமாக வைத்தார். எந்த சேதாரமுமின்றி தேரை அதிலே குதித்தது. மனிதனும் பிழைத்தான். அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த சிஷ்யன் தேரையர் என்றே அழைக்கப்பட்டார். இந்த சான்று போதுமே தமிழர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னோடி என்பதற்கான அத்தாட்சி. ஓம் நமசிவாய!! உலகின் முதல் சித்தரான சிவபெருமான் திருவடிகள் போற்றி போற்றி!!

18/03/2016: இன்று வெள்ளிக்கிழமை நவநிதிகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோமா!! சங்கம், பதுமம், மாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம், நீலம், கர்வம் என்னும் 9 குபேரநிதி. நவமணி – கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம், வைரம் என்னும் 9 மணிகள். இந்த வகை செல்வங்களெல்லாம் தங்கள் பணப்பெட்டியில் சேரட்டும். தாங்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்ந்து இந்த சமூகத்திற்கு ஏதேனும் நல்ல சேவைகளை செய்யுங்கள். அதன் மூலம் தங்கள் சந்ததியினர் நல்ல நிலையில் இருப்பார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை!!

23/03/2016: 32 அறம்: ஆதூரசாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தவர்க்குணவு, பசுவுக்கு வாயுரை, சிறைசோறு, ஐயம், நடைதிண்பண்டம், மகசோறு, மகபேறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால், அரவை பிணஞ்சுடல், அழிந்தோரை நிறுத்துதல், வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய் மருந்து, கண்ணாடி, நாலோலை, கண் மருந்து, தலைக்கு எண்ணெய், பெண் போகம், அட்டூண், பிறர் அறங்காத்தல், தண்ணீர் பந்தல், மடம், தடம், கா, ஆவுரிஞ்சு நடுதரி, ஏர் விடுதல், விலை கொடுத்து கொலை உயிர் மீட்டல், இவை எல்லாம் கார்குலத்தோர் கடமை.

25/03/2016: பழந்தமிழர் போர் செய்வதைக் கூட இயற்கையோடு இணைந்தும் உறுதியுடனும் செய்தார்கள். போரியல் பற்றி கொஞ்சம்…. பூக்களின் பெயர் போர் முறைக்கு வைத்திருக்கிறார்கள். பூவோடு போரா!!! எதிரியின் பசு மந்தையைக் கவர்வது “வெட்சி”, போருக்கு புறப்படுவது “வஞ்சி” எதிர்த்து வருதல் “காஞ்சி” மதில் காத்து நிற்பது “நொச்சி” மதிலை வளைத்து முற்றுகையிடுவது “உழிஞை” போர் புரிதல் “தும்பை” வெற்றி பெறுதல் “வாகை” பசு மந்தையை மீட்டுக் கொண்டு வருதல் “கரந்தை” என்று வீரம் கூட அழகான கவிதையானது அன்று. காதலும் வீரமும் அழகு!!

19/04/2016: After 12 years of forest life and 1 year hidden life dharma sent Lord Krishna to get their kingdom back. Before going Hasthinapuram Krishna had a meet with 5 brothers. Bheem, Arjun, Nakul Said they will fight and get kingdom back. But sahadev said “Krishna do as you wish” Lord surprised and ask sahadeva the reason, he replied once upon a time boomatha requested you to save her that she can’t bear this much adharma so you plan to devise the battle plan. Lord asked saha then what we can do to stop battle? Contd tomorrow….

20/04/2016: Saha: Cancel all sabadham and allow Karna to rule instead Dharma/Duryodhana but before that Karna should kill Arjun, Panjali’s hair should be shaved, I should bond you. Lord: Even mother Yasodha unable to bond me; how can you? Saha: please show your different faces to me I may bond you. Lord did the same, saha found that for all avadhar; foot is primary so he tied the foot with his divine love to save 5 brothers in the battle and released Krishna! GOD AND LOVE ARE SAME!







11/05/2016: Hope you all enjoy daily SMS of different concepts. It might be served as your stress buster, entertainer, induced to think about a topic, sometimes boring too. For any instance there should be a regular interval and break up episodes. I am writing this lengthy text for my regular freeks, to accept. Today I want to put and end card to my SMS travel. Will get back to you later if time permits. Keep smiling always!!

Part II will come soon….

No comments: