Friday, January 12, 2018

                          2018  புத்தாண்டு வரவேற்பு

 மார்கழி பூக்களின் வாசனையோடு!
மலர்ந்து மணம் பரப்பும் புத்தாண்டு!!
மலரும் நினைவுகளின் பெட்டகமாய்!
மனதில் பதியம் போட்்டது நடப்பாண்டு!!

 இன்பங்கள் அள்ளி தந்ததை போலவே!
துன்பங்களை வாரிவழங்கவும் செய்தது!!
வெற்றியும் தோல்வியும் மாற்றி தேற்றி!
வானவில் வாழ்க்கையின் வழக்கம் காட்டி!!

நம்பிக்கை ஊற்றுக்கண் திறந்து வைத்ததும்!
நட்பின் வளையங்கள் அகலம் சேர்த்ததும்!!
நல்லார் அல்லார் தேர்ந்ததும் தெளிந்ததும்!
அனுபவ கல்வியின் நிகழ்வுகள் அ(ள்)ளித்ததும்!!

கனவுகள் காண சிறகாய் முளைத்தாய்!
கனவுகள் காண சிறகுகள் தந்தாய்!!
கனவுகள் காண சிறகாய் வந்தாய்!
கனவுகள் கல்வெட்டாக வரமும் தந்தாய்!!

எல்லாம் தந்தருளும் தாரகையே!
 நித்தம் எம்மை புதுப்பிக்கும் உனக்கு!
நாங்கள் எடுக்கும் விழாவாம் இதற்கு!
பெயரான்றை சூட்டிக் கொண்டோம்!!

அது தான் " வாழிய புத்தாண்டு"!

No comments: