பச்சை வண்ண ஓவியமாய்
அல்லும் பகலும் காணுகின்றேன்
அமர உனக்கு நேரமில்லை
ஏனெனில் நீ செங்குத்தாய்
வளர்ந்தாயே எழுந்தாயே
காய்த்த மரம் கல்லடி படுமாம்
பட்டாலும் நீ அழுவதில்லை
ஏனெனில் நீ உணர்விழந்தாய்
ஏ மரமே!
என்றாரேனும் வைதாலும்
திரும்பி நானும் பார்க்கின்றேன்
நீயும் நானும் ஒன்றென்று
அது மார்கழி பனிக்காலம்
No comments:
Post a Comment