Sunday, December 21, 2014

மரம்



பச்சை வண்ண ஓவியமாய்
அல்லும் பகலும் காணுகின்றேன்

அமர உனக்கு நேரமில்லை
ஏனெனில் நீ செங்குத்தாய்
வளர்ந்தாயே எழுந்தாயே

காய்த்த மரம் கல்லடி படுமாம்
பட்டாலும் நீ அழுவதில்லை
ஏனெனில் நீ உணர்விழந்தாய்

ஏ மரமே! 
என்றாரேனும் வைதாலும்
திரும்பி நானும் பார்க்கின்றேன்

நீயும் நானும் ஒன்றென்று
நீ அழுவதர்க்கு ஒரு காலம்
அது மார்கழி பனிக்காலம்





No comments: