Sunday, December 21, 2014

விடியல்



கருவான் மாறும்
வெயிலை நாடும்
கிழக்கு சிவக்கும்
உலகம் விழிக்கும்
சேவல் கூவும்
வேலை தொடங்கும்


ஓ மனிதர்களே!
விடியலை நோக்கி புறப்பட்டுவிட்டீர்களா!!
நானும் வருகிறேன் என்றது
மெல்லிய பூங்காற்று........


மரம்



பச்சை வண்ண ஓவியமாய்
அல்லும் பகலும் காணுகின்றேன்

அமர உனக்கு நேரமில்லை
ஏனெனில் நீ செங்குத்தாய்
வளர்ந்தாயே எழுந்தாயே

காய்த்த மரம் கல்லடி படுமாம்
பட்டாலும் நீ அழுவதில்லை
ஏனெனில் நீ உணர்விழந்தாய்

ஏ மரமே! 
என்றாரேனும் வைதாலும்
திரும்பி நானும் பார்க்கின்றேன்

நீயும் நானும் ஒன்றென்று
நீ அழுவதர்க்கு ஒரு காலம்
அது மார்கழி பனிக்காலம்





Saturday, December 20, 2014

தமிழ் வாழ்த்து





"அ" என்ற முதலெழுத்தைக் கொண்டு
"ழ" என்னும் அழகெழுத்தை பெற்ற
அழகின் திருவே!

தத்தை மொழியானவளே!
உலகை வளம் வந்தவளே!!

தமிழென்னும் பேருடையாள்!
வாழ்க நீ செறிவுடனே!!

ததியரால் பாடப்பெற்ற
பைந்தமிழே வாழ்க நீ!
பாரினிலே செழித்து நீ!!

அழகு வடிவானவளே!
அருஞ்சுவையை மிகுத்தவளே!!

அவ்வையார் பாடியதோர் ஆத்திச்சூடி!
இனிமையிலே பொங்குதடி இன்பம் கோடி!!

வந்ததொரு பல்லவிதான் எம்மை நாடி!
பழகு தமிழ் வார்த்தைகள்தான் எத்தனை கோடி!!

தமிழென்னும் நங்கையே!
பொங்குமொரு கங்கையே!!

பாமரனும் பாடுகின்ற
பைந்தமிழே வாழ்க நீ!
பாரினிலே செழித்து நீ!!

தமிழ் பழமொழிகளுடன் சார்ந்த சித்த மருத்துவ குறிப்பு



கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு


கடுக்காய் என்பது மருந்துக்கு பயன்படும் காய். இம்மருந்து மலச்சிக்கலுக்கும் பெற்ற தாய்க்கும் அதிகமாக பயன்படும். கடுக்காயை மருந்துக்கு பயன்படுத்தும் போது அதன் வெளி தோலை மட்டும் எடுத்துவிட்டு உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட வேண்டும்.

 இதே போலவே, சுக்கு (காய்ந்த இஞ்சி) என்பதும் மிக அதிகமாக கைமருத்துவத்தில் பயன்படுத்தப்படும். பச்சையாக (இஞ்சியாக) இருக்கும் போது அதன் மேல் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும். 

கடுக்காயின் உள்ளே இருக்கும் கொட்டையும் இஞ்சிக்கு மேலே இருக்கும் தோலும் நஞ்சு ஆகம். அதனால் அவற்றை மருந்துக்கு பயன்படுத்த கூடாது.

ஆக எந்த ஒரு பொருளானலும் பயன் படுத்தும் விதத்தில் செய்தால் அது மருந்தாகும் அன்றி அதுவே விஷமாகும். 

மனிதர்களும் அது போலதான்!!!