Friday, February 23, 2024

பிராயச்சித்தம் (தொடக்கம் - பகுதி 1)

அது ஒரு சுகமான காலை பொழுது தோட்டத்துப் புள்ளினங்கள் ஆதவன் வருகையை அறிவிக்கும் பொருட்டு தனது இன்னிசை கீதங்களை வாசித்துக் கொண்டிருந்தன. அதிகாலை துயில் எழுந்த சோம்பலை விரட்டும் பழக்கமுடை ஹச்ய பவானி காலை நேரத்து இன்னிசையோடு கண் விழித்தாள்.


"ஏ குருவி சிட்டுக்குருவி" என்று பாடிய படியே உற்சாகமாக தனது வேலைகளை தொடங்கியவள் சுவையான சமையல் முடித்து அதற்குரிய டப்பாக்களில் நிரப்பி கொண்டு வேலைக்கு புறப்பட ஆயத்தமானால் நான்கு சப்பாத்திகள் கொஞ்சம் சாதம் எண்ணெய் கத்திரிக்காய் அவ்வளவுதான் இன்றைய மெனு. ஆனால் அதிகமாக எடுத்துச் சென்றால்தான் தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துண்ண ஏதுவதாக இருக்கும்.


 அம்மா இருந்தவரை அவளுக்கு சமையல் அறையில் வேலையே இருக்காது. ஆனால் தாயார் சமைத்து தரும் உணவிலிருந்து; சுவையும், தயார் செய்யும் முறையும் பழகியவள். கண் பார்க்க கை வேலை செய்யும் 
என்பார்களே அப்படி ஒரு நேர்த்தி. சிறிய வயதில் தந்தையை இழந்தவளை, படிப்பை பாதியிலேயே நிறுத்தி தந்தையை மனம் முடித்திருந்த தாய் அவளது சொந்த உழைப்பிலேயே தானும் படித்து பவானிக்கும் தகுந்த கல்வியை அளிக்க தவறவில்லை. ஒழுக்கம் நேர்மை இவைகளை கற்றுத்தந்து மகளை செம்மையுடன் வழி நடத்தினார்.





சுவாமி விவேகானந்தர் தான் தாயின் வழிகாட்டி அவர் சொன்ன வார்த்தைகளின் படி "நமக்கு எத்தகைய கல்வி வேண்டும் தெரியுமா? அந்த கல்வி மன உறுதியை அளித்து அறிவினை விருத்தி செய்து ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் தன் சொந்த காலில் நிற்கும் திறனை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்" என்று சொல்லி சொல்லி வளர்த்தார் அதனால் தானோ ஆசிரியப் பணியை பவானி விரும்பி ஏற்றாள். குழந்தைகளுக்கு புதிய யுத்திகளை கையாண்டு பல்துறை சார்ந்த விஷயங்களோடு மொழிதிறனை மேம்படுத்துவாள். தமிழ் ஆசிரியையாக தனியார் பள்ளியில் வேலை பார்த்து வரும் பவானி இணையதள வகுப்புகளும் எடுக்கிறாள்.

ஆறு வயது சிறுமி பூமிகாவின் நினைவு தான் வந்தது அவளுக்கு "இன்று எனக்கு நீங்கள் கவிதை எழுத கற்றுத் தருகிறேன் என்று சொன்னீர்களே மேம் 
 எப்போது வரட்டும்?" இப்படி கேட்டவளை என்ன சொல்வது என்று தனக்குள் சிரித்துக் கொண்டாள். பிள்ளைகளுக்கு முறையாக கற்றுத் தந்தால் போதும் அவர்களின் மொழி ஆர்வம் தூண்டப்படும் என்பது திண்ணம். இன்னும் பல சில வார்த்தைகளை கற்றறிந்த இரண்டாம் வகுப்பு மாணவியை சான்று.


 "பூமி நீ இப்போது இரண்டு வரிகளில் எதுகை மோனையோடு எழுதி பழகு பிறகு நாம் அதை முறைப்படுத்தி கவிதையாக எழுதலாம்" என சொல்லிக்கொடுத்த பின் தான் அமைதியானால் இப்படி சிந்தித்துக்கொண்டே மாலை பள்ளியில் இருந்து தன் ஸ்பானிய வகுப்புக்கு கிளம்பியவள் சிறிது 
கால தாமதமாகிவிட்டதை கவனித்தாள்.


பவானி வேகவேகமாக அந்த பேருந்தை பிடிக்க ஓடி வந்தாள். பேருந்தில் இருந்த அந்த பெரியவர் அவள் வருவதையே  பார்த்துக் கொண்டிருந்தார். அவள் நெருங்க நெருங்க அவர் முகம் மலர்ந்து சிரித்தது. பேருந்தில் ஏறிய பவானி அவரை கடந்து போய் வேறு இடத்தில் உட்கார்ந்தாள். பக்கத்தில் இருந்த பையன் "என்ன பெரியவரே பேத்தி வரான்னு சொன்னீங்க அந்த பொண்ணு கண்டுக்கவே இல்லை" என்றான்.


 அவனுக்கு தெரியாது பேத்திக்கு தன்னை தெரியாது என்று தெரிந்தாலும் எப்படி நடந்து கொள்வாள் என்று தன்னாலும் அனுமானிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டார். பேசாமல் அவளை பின்தொடர்ந்தார். ஒரு வாரமாக இது நடந்து கொண்டிருக்கிறது ஆனால் பவானிக்கு இதெல்லாம் தெரியாது. தமிழ் வகுப்பை ஸ்பானிய மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதால் அதனை கற்று தெரிந்து தமிழ் கற்பிக்க வேண்டும் மேலும் அதிகம் பேசப்படும் ஒரு மொழியை கற்பது அவளுக்கும் ஆர்வமே நாளை வார இறுதி முதல் அவளை வீட்டிலேயே சந்திக்கலாம் தன் மகள் சுயமாக கட்டிய வீடு என்று கர்வமாக எண்ணிக் கொண்டார் அந்த கோடீஸ்வரர். 


காலம் தாழ்ந்த சிந்தனை தான் ஆனால் அடுத்த தலைமுறையுடனாவது தனது உறவு நிலைத்து இருக்க வேண்டுமே என்று மனமுருக வேண்டிக் கொண்டார். பஞ்சனையில் படுத்த அவரை காலம் பின்னோக்கி அழைத்துச் சென்றது அவரது என்ன பின்னல்களோடு...


 ஆம் அவை சிக்கலானவை தானே!


தொடரும்.....

No comments: