Tuesday, January 23, 2018

பழமொழி மருத்துவம்

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்



 இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும்.

கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும்.

இதன் மேல் தோலை மட்டும் (கடுக்காய்க்கு அக நஞ்சு - கொட்டை விஷம்) மருத்துவத்திற்கு எடுத்து பொடித்து சூரணமாக ஆக்கி நெய்/தேனுடன் சேர்த்தோ அல்லது வேறு வகையிலோ பயன்படுத்துவார்கள்.

கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும்.

அதை போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

ஒருவருக்கு மலம் போகாமல் மலச்சிக்கல் நோய் வரும் போது மலமிலக்கியாக எட்டு கடுக்காயை சூரணம் செய்து கொடுத்தால் மலவரத்து சீராகும். இதுவே பிள்ளை பெற்ற தாய்க்கும் மருந்தாக பயன்படும். எரு = கழிவு = மலம்

Wednesday, January 17, 2018

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!!

 கரும்பு இஞ்சி மஞ்சள் முளைத்த இரு சக்கர வாகனங்கள்!
கட்டியம் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!
அழகு வரிசைக் கட்டிக் கொண்ட பானைகளும் களையங்களும்!
அறிவிப்பாய் கூறுகிறது பொங்கல் வந்ததென்று!!

பனை ஓலையா மாவிலையா பூங்கொத்துகளா!
பலவித தோரணங்கள் பறை சாற்றுகின்றன பொங்கல் வந்ததென்று!!
காய்கறிகளும் கனிக் கூட்டங்களும் கமுகும் வாழையும் கூட்டாய் நின்றன பொங்கல் வந்ததென்று!!
உழவுக் காளைகளும் காராம் பசுக்களும்!
ஆவலோடு பார்த்தன பொங்கல் வந்ததென்று!!

தீபமேற்றி சூரிய வழிபாடு!
உழவர்களின் முறைபாடு!
இத்தனை இன்பங்கள் அள்ளிக் கொடுத்திடும்!
பொங்கல் வந்ததென்று தான... தந்தானா... நீ பாடு!!

 பண முடக்கம் மழை பொய்த்து வழக்குகள் வந்தாலும்!
இன்னும் பற்பல இடர்கள் வந்தாலும்...
 புதுப்படங்கள் புத்தாடை புன்னகை பூசிவிட!!
பொங்கலும் வந்ததே எங்கள் துயர் மறக்க என்று!
தமிழர்கள் பாடினார்கள்..... (பொங்கலோ பொங்கல்!)

 - இராஜகுமாரி விஸ்வேஸ்வரன் 

Friday, January 12, 2018

                          2018  புத்தாண்டு வரவேற்பு

 மார்கழி பூக்களின் வாசனையோடு!
மலர்ந்து மணம் பரப்பும் புத்தாண்டு!!
மலரும் நினைவுகளின் பெட்டகமாய்!
மனதில் பதியம் போட்்டது நடப்பாண்டு!!

 இன்பங்கள் அள்ளி தந்ததை போலவே!
துன்பங்களை வாரிவழங்கவும் செய்தது!!
வெற்றியும் தோல்வியும் மாற்றி தேற்றி!
வானவில் வாழ்க்கையின் வழக்கம் காட்டி!!

நம்பிக்கை ஊற்றுக்கண் திறந்து வைத்ததும்!
நட்பின் வளையங்கள் அகலம் சேர்த்ததும்!!
நல்லார் அல்லார் தேர்ந்ததும் தெளிந்ததும்!
அனுபவ கல்வியின் நிகழ்வுகள் அ(ள்)ளித்ததும்!!

கனவுகள் காண சிறகாய் முளைத்தாய்!
கனவுகள் காண சிறகுகள் தந்தாய்!!
கனவுகள் காண சிறகாய் வந்தாய்!
கனவுகள் கல்வெட்டாக வரமும் தந்தாய்!!

எல்லாம் தந்தருளும் தாரகையே!
 நித்தம் எம்மை புதுப்பிக்கும் உனக்கு!
நாங்கள் எடுக்கும் விழாவாம் இதற்கு!
பெயரான்றை சூட்டிக் கொண்டோம்!!

அது தான் " வாழிய புத்தாண்டு"!